பக்கம் எண் :

12

    
 நீயே, அலங்குளைப் பரீஇஇவுளிப்
பொலந்தேர்மிசைப் பொலிவுதோன்றி
15.மாக்கடல் நிவந்தெழுதரும்
  செஞ்ஞாயிற்றுக் கவினைமாதோ
அனையை ஆகன் மாறே
தாயின் தூவாக் குழவி போல
ஓவாது கூஉநின் உடற்றியோர் நாடே. (4)

     திணை :  வஞ்சி ;  துறை:  கொற்றவள்ளை. சோழன் உருவப்
பஃறேர் இளஞ்சேட் சென்னியைப் பரணர் பாடியது.

     உரை : வாள்  வலந்தர மறுப்பட்டன - வாள் வெள்ளியைத்
தருதலாற்  குருதிக்கறை  பட்டன;   செவ்வானத்து   வனப்புப்
போன்றன -  செக்கர்வானத்தினது  அழகை  யொத்தன;  தாள்
களங்கொளக் கழல்பறைந்தன -  கால்  புடைபெயர்ந்து  போர்
செய்து   களத்தைத்  தமதாக்கிக்  கொள்ளுதலால்  வீரக்கழல்
அருப்புத்தொழில்   பறைந்தவை;   கொல்லேற்றின்   மருப்புப்
போன்றன -  கொல்லும்  ஆனேற்றினது  கோட்டை யொத்தன;
தோல் துவைத் தம்பின் துளை தோன்றுவன;  நிலைக்கு  ஒராவு
இலக்கம் போன்றன - நிலையிற் றப்பாத இலக்கத்தை யொத்தன;
மா எறிபதத்தான் இடம் காட்ட - குதிரைகள் எதிரியை யெறியும்
காலமுடையான் இடவாய் வலவாயாகிய இடத்தைக் காட்ட; கறுழ்
பொருத  செவ்வாயான் - முகக்கருவி பொரப்பட்ட செவ்வாயை
யுடைமையான்;  எருத்து  வவ்விய   புலி   போன்றன - மான்
முதலாயினவற்றின்   கழுத்தைக்  கவ்வி  யுதிரம் உவற்றியுண்ட
புலியை  யொத்தன;  களிறு - களிறுகள், கதவெறியாச்  சிவந்து
உராஅய் - கதவை  முறித்து  வெகுண்டுலாவி;  நுதி மழுங்கிய
வெண்கோட்டான்   -     நுனை      தேய்ந்த     வெளிய
கோட்டையுடைமையான்; உயிர் உண்ணும் கூற்றுப் போன்றன -
உயிரையுண்ணும்   கூற்றை   யொத்தன;    நீயே -   நீதான்;
அலங்குளைப் பரீஇ இவுளிப் பொலந்  தேர்மிசை   - அசைந்த
தலையாட்டமணிந்த கதியையுடைய   குதிரையாற்  பூட்டப்பட்ட
பொற்றேரின்   மேலே;   பொலிவு  தோன்றி -  பொலிவொடு
தோன்றுதலால்;  மாக்கடல்  நிவந்து  எழுதரு செஞ்ஞாயிற்றுக்
கவினை - கரிய கடலின்கண்ணே யோங்கி  யெழுகின்ற செய்ய
ஞாயிற்றினது  ஒளியையுடையை;  அனையை  யாகன்   மாறு -
அத்தன்மையையாதலால்;  தாயில்  தூவாக்   குழவி   போல -
தாயில்லாத உண்ணாக் குழவி போல;  ஓவாது  கூஉம் ஒழியாது
கூப்பிடும்;  நின்    உடற்றியோர்    நாடு    -    நின்னைச்
சினப்பித்தவருடைய நாடு எ-று.