| | அறவை யாயி னினதெனத் திறத்தல் மறவை யாயிற் போரொடு திறத்தல் அறவையு மறவையு மல்லை யாகத் திறவா தடைத்த திண்ணிலைக் கதவின் | 15. | நீண்மதி லொருசிறை யொடுங்குதல் | | நாணுத்தக வுடைத்திது காணுங் காலே. (44) |
திணையும் துறையும் அவை. அவன் ஆவூர் முற்றியிருந்த காலத்து அடைத்திருந்த நெடுங்கிள்ளியைக் கோவூர் கிழார் பாடியது.
உரை: இரும் பிடித் தொழுதியொடு - கரிய பிடியினது ஈட்டத்தோடு; பெருங் கயம் படியா - பெரிய கயத்தின்கட் படியாவாய்; நெல்லுடைக் கவளமொடு நெய் மிதி பெறாஅ - நெல்லையுடைய கவளத்துடனே நெய்யால் மிதித்துத் திரட்டப்பட்ட கவளமும் பெறாவாய்; திருந்தரை நோன் வெளில் வருந்த ஒற்றி - திருந்திய மருங்கையுடைய வலிய கம்பம் வருந்தச் சாய்த்து; நிலமிசைப் புரளும் கைய - நிலத்தின் மேலே புரளும் கையை யுடையவாய்; வெய் துயிர்த்து அலமரல் யானை - வெய்தாக வுயிர்த்துச் சுழலும் யானை; உரு மென முழங்கவும் - உருமேறு போல முழங்கவும்; பாலில் குழவி அலறவும் - பாலில்லாத குழவி அழவும்; மகளிர் பூவில் வறுந்தலை முடிப்பவும் - மகளிர் பூவில்லாத வறிய தலையை முடிப்பவும்; நீரில் வினைபுனை நல்லில் இனை கூஉக் கேட்பவும் - நீரில்லாத தொழில் புனைந்த நல்ல மனையிடத்துள்ளார் வருந்திக் கூப்பிடும் கூப்பீட்டைக் கேட்கவும்; ஈங்கு இனிதிருத்தல் இன்னாது - இவற்றிற்கு நாணாது இவ்விடத்து நீ இனிதாக இருத்தல் இன்னாது; துன்னரும் துப்பின் வயமான் தோன்றல் - நண்ணுதற்கரிய வலிமையுடைய வலிய குதிரையையுடைய தோன்றால்; அறவை யாயின் நினது எனத் திறத்தல் - அறத்தையுடையையாயின் இது நினதன்றோ வென்று சொல்லித் திறத்தல் செய்வாயாக; மறவை யாயின் போரொடு திறத்தல் - மறத்தை யுடையை யாயின் போரால் திறத்தல் செய்வாயாக; அறவையும் மறவையும் அல்லையாக - அவ்வாறன்றி அறத்தையும் மறத்தையும் உடையை யல்லையாக; திறவாது அடைத்த திண்ணிலைக் கதவின் - திறவாது அடைக்கப்பட்ட திண்ணிய நிலையை யுடைத்தாகிய கதவினையுடைய; நீண் மதில் ஒரு சிறை ஒடுங்குதல் - நீண்ட மதிலுள் ஒரு பக்கத்தே ஒதுங்குதல்; நாணுத் தக வுடைத்து - நாணுந் தன்மையை யுடைத்து; இது காணுங் கால் - இஃது ஆராயுங்காலத்து எ-று.
செய் யென வொருசொல் வருவித்துரைக்கப்பட்டது; திறத்த லென்பதனை இது திறக்க வியங்கோளீறாக வுரைப்பினு மமையும். அம்ம,
|