பக்கம் எண் :

122

அறவை யாயி னினதெனத் திறத்தல்
மறவை யாயிற் போரொடு திறத்தல்
அறவையு மறவையு மல்லை யாகத்
திறவா தடைத்த திண்ணிலைக் கதவின்
15. நீண்மதி லொருசிறை யொடுங்குதல்
நாணுத்தக வுடைத்திது காணுங் காலே. (44)

     திணையும் துறையும் அவை. அவன் ஆவூர் முற்றியிருந்த
காலத்து அடைத்திருந்த நெடுங்கிள்ளியைக் கோவூர் கிழார் பாடியது.

     உரை: இரும் பிடித் தொழுதியொடு - கரிய பிடியினது
ஈட்டத்தோடு; பெருங் கயம் படியா - பெரிய கயத்தின்கட்
படியாவாய்; நெல்லுடைக் கவளமொடு நெய் மிதி பெறாஅ -
நெல்லையுடைய கவளத்துடனே நெய்யால் மிதித்துத் திரட்டப்பட்ட
கவளமும் பெறாவாய்; திருந்தரை நோன் வெளில் வருந்த ஒற்றி -
திருந்திய மருங்கையுடைய வலிய கம்பம் வருந்தச் சாய்த்து;
நிலமிசைப் புரளும் கைய - நிலத்தின் மேலே புரளும் கையை
யுடையவாய்; வெய் துயிர்த்து அலமரல் யானை - வெய்தாக
வுயிர்த்துச் சுழலும் யானை; உரு மென முழங்கவும் - உருமேறு போல
முழங்கவும்; பாலில் குழவி அலறவும் - பாலில்லாத குழவி அழவும்;
மகளிர் பூவில் வறுந்தலை முடிப்பவும் - மகளிர் பூவில்லாத வறிய
தலையை முடிப்பவும்; நீரில் வினைபுனை நல்லில் இனை கூஉக்
கேட்பவும் - நீரில்லாத தொழில் புனைந்த நல்ல மனையிடத்துள்ளார்
வருந்திக் கூப்பிடும் கூப்பீட்டைக் கேட்கவும்; ஈங்கு இனிதிருத்தல்
இன்னாது - இவற்றிற்கு நாணாது இவ்விடத்து நீ இனிதாக இருத்தல்
இன்னாது; துன்னரும் துப்பின் வயமான் தோன்றல் - நண்ணுதற்கரிய
வலிமையுடைய வலிய குதிரையையுடைய தோன்றால்; அறவை யாயின்
நினது எனத் திறத்தல் - அறத்தையுடையையாயின் இது நினதன்றோ
வென்று சொல்லித் திறத்தல் செய்வாயாக; மறவை யாயின் போரொடு
திறத்தல் - மறத்தை யுடையை யாயின் போரால் திறத்தல்
செய்வாயாக; அறவையும் மறவையும் அல்லையாக - அவ்வாறன்றி
அறத்தையும் மறத்தையும் உடையை யல்லையாக; திறவாது அடைத்த
திண்ணிலைக் கதவின் - திறவாது அடைக்கப்பட்ட திண்ணிய
நிலையை யுடைத்தாகிய கதவினையுடைய; நீண் மதில் ஒரு சிறை
ஒடுங்குதல் - நீண்ட மதிலுள் ஒரு பக்கத்தே ஒதுங்குதல்; நாணுத் தக
வுடைத்து - நாணுந் தன்மையை யுடைத்து; இது காணுங் கால் - இஃது
ஆராயுங்காலத்து எ-று.

     செய் யென வொருசொல் வருவித்துரைக்கப்பட்டது; திறத்த
லென்பதனை இது திறக்க வியங்கோளீறாக வுரைப்பினு மமையும். அம்ம,