பக்கம் எண் :

126

புலமையால் வென்று தலைமை பெறுவது அவர்க் கியல்பு” என்று
கூறுகின்றார்.

வள்ளியோர்ப் படர்ந்து புள்ளிற் போகி
நெடிய வென்னாது சுரம்பல கடந்து
வடியா நாவின் வல்லாங்குப் பாடிப்
பெற்றது மகிழ்ந்து சுற்ற மருத்தி
5. ஓம்பா துண்டு கூம்பாது வீசி
வரிசைக்கு வருந்துமிப் பரிசில் வாழ்க்கை
பிறர்க்குத் தீதறிந் தன்றோ வின்றே, திறப்பட
நண்ணார் நாண வண்ணாந் தேகி
ஆங்கினி தொழுகி னல்ல தோங்குபுகழ்
10. மண்ணாள் செல்வ மெய்திய
நும்மோ ரன்ன செம்மலு முடைத்தே. (47)

     திணையும் துறையு மவை. சோழன் நலங்கிள்ளியுழை நின்று
உறையூர் புகுந்த இளந்தத்த னென்னும் புலவனைக்காரியாற்றுத்
துஞ்சிய நெடுங்கிள்ளி ஒற்று வந்தாரென்று கொல்லப் புக்குழிக்
கோவூர் கிழார் பாடி உய்யக்கொண்டது.

     உரை: வள்ளியோர்ப் படர்ந்து - வண்மை யுடையோரை
நினைத்து; புள்ளிற் போகி - பழுமரம் தேரும் பறவை போலப்
போகி; நெடிய என்னாது சுரம் பல கடந்து - நெடிய வென்று
கருதாது அரிய வழி பலவற்றையும் கழிந்து; வடியா நாவின் -
திருந்தாத நாவால்; வல்லாங்குப் பாடி - தாம் வல்லபடி பாடி;
பெற்றது மகிழ்ந்து- ஆண்டுப் பெற்ற பரிசிலான் மகிழ்ந்து; சுற்றம்
அருத்தி - சுற்றத்தை யூட்டி; ஓம்பா துண்டு - தாமும் பொருளைப்
பாதுகாவா துண்டு; கூம்பாது வீசி - உள்ளம் மலர்ந்து வழங்கி;
வரிசைக்கு வருந்தும்இப்பரிசில் வாழ்க்கை - தம்மைப் புரப்போாராற்
பெறும் சிறப்பு ஏதுவாகவருந்தும் இப் பரிசிலான் வாழும் வாழ்க்கை;
பிறர்க்குத் தீதறித் தன்றோ இன்று - பிறர்க்குச் செய்யும் கொடுமை
யறிந்ததோ வெனின்இல்லை; திறப்பட - கூறுபட; நண்ணார் நாண -
கல்வி முகத்தால் தம்மொடு மலைந்தோர் நாண; அண்ணாந் தேகி -
தமது கல்வியான் வென்று தலையெடுத்து நடந்து; ஆங்கு இனி
தொழுகின் அல்லது - அவ்விடத்து இனிதாக ஒழுகி னல்லது; ஓங்கு
புகழ் மண்ணாள் செல்வமெய்திய நும்மோ ரன்ன செம்மலும்
உடைத்து - உயர்ந்த புகழையுடைய நிலமாளும் திருப்பொருந்திய
நும்மை யொக்கும் தலைமையு முடைத்து எ-று.

     ஓங்கிய வென்பதூஉம் செல்வமுடைத் தென்பதூஉம் பாடம். சுரம்பல
கடந்து புள்ளிற் போகி யென மாறிக் கூட்டுக. பரசில்வாழ்க்கை