பக்கம் எண் :

128

கள்நா றும்மே கானலந் தொண்டி
5. அன்னோற் படர்தி யாயி னீயும்
எம்மு முள்ளுமோ முதுவா யிரவல
அமர்மேம் படூஉங் காலைநின்
புகழ்மேம் படுநனைக் கண்டன மெனவே. (48)

     திணை: பாடாண்டிணை. துறை: புலவராற்றுப்படை.
சேரமான்கோக்கோதை மார்பனைப் பொய்கையார் பாடியது.

     உரை: கோதை மார்பின் கோதையானும் - கோதையுடைய
மார் பிற்கணிந்த கோதையானும்; கோதையைப் புணர்ந்தோர்
கோதை யானும் - அக் கோதையைப் புணர்ந்த மகளிர் சூடிய
கோதையானும்;மாக்கழி மலர்ந்த நெய்தலானும் - கரிய கழியின்கண்
மலர்ந்த நெய்தற் பூவானும்; கள் நாறும் கானலம் தொண்டி - தேன்
நாறாநிற்கும் கானலையுடைய தொண்டி; அஃது எம் மூர் - அஃது
எம்முடைய வூர்; அவன் எம் இறைவன் - அவன் எம்முடைய
தலைவன்; அன்னோற் படர்தி யாயின் - அத் தன்மையோனிடத்தே
போகின்றாயாயின்; நீயும் எம்மும் உள்ளுமோ - நீயும் எம்மையும்
நினைப்பாயாக; முது வாய் இரவல - முதிய வாய்மையையுடைய
இரவல; அமர் மேம்படூஉங் காலை - நீ அமரின்கண் மேம்படுங்
காலத்து; நின் புகழ் மேம்படுநனைக் கண்டனம் என - நினக்கு
உளதாகிய புகழை மேம்படுத்துமவனைக் கண்டேம் யாமெனச்
சொல்லி எ-று.

     இரவல, நீயும் அன்னோற் படர்குவையாயின், நின் புகழ் மேம்படு
நனைக் கண்டன மென எம்மையும் உள்ளெனக் கூட்டுக. கண்டன மென
எம்மும் உள்ளென்றாரேனும், உள்ளிக் கண்டனமெனச் சொல்லென்பது
கருத்தாகக் கொள்க. மோ: முன்னிலை யசைச்சொல். நீயு மென்பதூஉ எம்மு
மென்பதூஉம் எச்சவும்மை.

     தலைவனது இயல்பையும் ஊரையும் கூறி, முதுவாயிரவல எம்முள்
உள்ளெனத் தன் தலைமை தோன்றக் கூறினமையின், இது புலவராற்
றுப்படை யாயிற்று.

     விளக்கம்: இடையறாச் சேறுடைமையால், கருத்திருக்கும் கழியை
“மாக்கழி” யென்றார்; குவளை முதலிய பூக்களின் மிகுதியால் கருத்துத்
தோன்றுதல்பற்றி இவ்வாறு கூறப்பட்டதென்றுமாம். அறிவு முதிர்ந்த
வாய்மையையுடைய இரவலன் (முருகு.284உரை) என்பர் நச்சினார்க்கினியர்.
உள்ளு மென்பதை எச்சப்படுத்தி, உள்ளிக் கண்டன மென இயைத்துக்
கொள்ளவேண்டு மென்பது கருத்து.