பக்கம் எண் :

144

     திணை: பாடாண்டிணை. துறை: செவியறிவுறூஉ. பாண்டியன்
இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை மதுரை மருதனிள நாகனார்
பாடியது.

     உரை: ஓங்கு மலைப் பெரு வில் பாம்பு ஞாண் கொளீஇ
-
உயர்ந்தமலையாகிய பெரிய வில்லைப் பாம்பாகிய நாணைக்
கொளுத்தி; ஒரு கணைகொண்டு மூவெயில் உடற்றி - ஒப்பில்லாததோ
ரம்பை வாங்கிய மூன்றுமதிலையும் எய்து; பெரு விறல் அமரர்க்கு -
பெரிய வலியையுடையதேவர்கட்கு; வென்றி தந்த - வெற்றியைக்
கொடுத்த; கறை மிடற் றண்ணல்- கரிய நிறஞ் சேர்ந்த
திருமிடற்றையுடைய இறைவனது; காமர் சென்னிப்
பிறை நுதல் விளங்கும் ஒரு கண் போல - அழகிய திருமுடிப் பக்கத்
தணிந்த பிறை சேர்ந்த திரு நெற்றிக் கண்ணே விளங்கும் ஒரு திரு
நயனம் போல; வேந்து மேம்பட்ட பூந் தார் மாற - மூவேந்த
ருள்ளும் மேம்பட்ட பூந்தாரை யுடைய மாற, கடுஞ்சினத்த கொல்
களிறும் - கடிய சினத்தை யுடையவாகிய கொல் களிறும்; கதழ் பரிய
கலி மாவும் விரைந்த செலவை யுடையவாகிய மனஞ் செருக்கிய
குதிரையும்; நெடுங் கொடிய நிமிர் தேரும் - நெடிய கொடியை
யுடையவாகிய உயர்ந்த தேரும்; நெஞ்சுடைய புகல் மறவரு மென -
நெஞ்சு வலியையுடைய போரை விரும்பும் மறவருமென; நான்குடன்
மாண்டதாயினும் - நான்கு படையுங் கூட மாட்சியைப்பட்டதாயினும்;
மாண்ட அறநெறி முதற்று அரசின் கொற்றம் - மாட்சிமைப்பட்ட
அறநெறியை முதலாக வுடைத்து வேந்தரது வெற்றி;
அதனால்-; நமர் எனக் கோல் கோடாது - இவர் நம்முடைய ரென
அவர் செய்த கொடுந் தொழிலைப் பொறுத்துக் கோல் வளையாது;
பிறர் எனக் குணம் கொல்லாது - இவர் நமக்கு அயலோ ரென்று
அவர் நற்குணங்களைக் கெடாது; ஞாயிற் றன்ன வெந் திறல்
ஆண்மையும் - ஞாயிற்றைப் போன்ற வெய்ய திறலையுடைய வீரமும்;
திங்கள் அன்ன தண் பெருஞ் சாயலும் - திங்களைப் போன்ற
குளிர்ந்த பெரிய மென்மையும்; வானத் தன்ன வண்மையும் -
மழையைப் போன்ற வண்மையுமென்ற; மூன்று முடையை யாகி -
மூன்றையு முடையையாகி; இல்லோர் கையற - இல்லாததோர்
இல்லையாக; நீ நீடு வாழிய - நீ நெடுங் காலம் வாழ்வாயாக; நெடுந்
தகை - நெடுந் தகாய்; தாழ் நீர் வெண்டலைப் புணரி அலைக்கும்
செந்தில் - தாழ்ந்த நீரையுடைய கடலின்கண் வெளிய
தலையையுடைய திரை யலைக்கும் செந்திலிடத்து; நெடு வேள்
நிலைஇய - நெடிய முருகவேள் நிலைபெற்ற; காமர் வியன் துறை -
அழகிய அகன்ற துறைக்கண்; கடுவளி தொகுப்ப - பெருங் காற்றுத்
திரட்டுதலால்; ஈண்டிய வடுவாழ் எக்கர் மணலினும் பல - குவிந்த
வடு வழுந்திய எக்கர் மணலினும் பலகாலம் எ-று.