| வைகல் யாணர் நன்னாட்டுப் பொருநன் எஃகுவிளங்கு தடக்கை யியறேர்ச் சென்னி சிலைத்தா ரகல மலைக்குந ருளரெனில் | 15. | தாமறி குவர்தமக் குறுதி யாமவன் | | எழுவுறழ் திணிதோள் வழுவின்று மலைந்தோர் வாழக் கண்டன்று மிலமே தாழாது திருந்தடி பொருந்த வல்லோர் வருந்தக் காண்ட லதனினு மிலமே. (61) |
திணை: வாகை. துறை: அசரவாகை. சோழன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னியைக் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியது.
உரை: கொண்டைக் கூழைத் தண்டழைக் கடைசியர் - கொண்டையாகிய மயிரையும் குளிர்ந்த தழையையுமுடைய கடைசியர்; சிறு மாண் நெய்தல் ஆம்பலொடு கட்கும் - சிறிய மாட்சிமையுடைய நெய்தலை யாம்பலுடனே களையும்; மலங்கு மிளிர் செறுவின் - மலங்கு பிறழ்கின்ற செய்யின்கண்ணே; தளம்பு தடிந்திட்ட - தளம்பு துணித்திடப்பட்ட; பழன வாளைப் பரூஉக் கண் துணியல் - பொய்கையிடத்து வாளையினது பரிய இடத்தையுடைய தடியை; புது நெல் வெண் சோற்றுக் கண்ணுறையாக - புதிய நெல்லினது வெள்ளிய சோற்றிற்கு மேலீடாகக் கொண்டு; விலாப்புடை மருங்கு விசிப்ப மாந்தி - விலாப்புடைப் பக்கம் விம்ம வுண்டு; நீடு கதிர்க் கழனி சூடு தடுமாறும் - நெடிய கதிரையுடைய கழனியிடத்துச் சூட்டை இடு மிட மறியாது தடுமாறும்; வன் கை வினைஞர் புன்றலைச் சிறாஅர் - வலிய கையையுடைய உழவர் புல்லிய தலையையுடைய சிறுவர்; தெங்கு படுவியன் பழம் முனையின் - தெங்கு தரும் பெரிய பழத்தை வெறுப்பின்; தந்தையர் குறைக்கண் நெடும்போ ரேறி - தந்தையருடைய தலை குவியாமல் இடப்பட்ட குறைந்த இடத்தையுடைய நெடிய போரின்கண்ணே யேறி; விசைத் தெழுந்து - உகைத் தெழுந்து; செழுங்கோள் பெண்ணைப் பழம் தொட முயலும் - வளவிய கோட் புக்க பனையினது பழத்தைத் தொடுதற்கு முயலும்; வைகல் யாணர் நன்னாட்டுப் பொருநன் - நாடோறும் புதுவரு வாயையுடைய நல்ல நாட்டிற்கு வேந்தனாகிய; எஃகு விளங்கு தடக்கை இயல் தேர்ச் சென்னி - வேல் விளங்கும் பெரிய கையினையும் இயற்றப்பட்ட தேரினையுமுடைய சென்னியது; சிலைத்தார் அகலம் மலைக்குநர் - இந்திர விற்போலும் மாலையையுடைய மார்போடும் மாறுபடுவோர்; உள ரெனின் - உளராயின்; தாம் அறிகுவர் தமக் குறுதி - தாமறிகுவர் தமக்குற்ற காரியம்; யாம் -
|