| தோல்கண் மறைப்ப வொருங்குமாய்ந் தனரே விசித்துவினை மாண்ட மயிர்க்கண் முரசம் பொறுக்குந ரின்மையி னிருந்துவிளிந் தனவே சாந்தமை மார்பி னெடுவேல் பாய்ந்தென | 10. | வேந்தரும் பொருதுகளத் தொழிந்தன ரினியே | | என்னா வதுகொ றானே கழனி ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர் பாசவன் முக்கித் தண்புனற் பாயும் யாண ரறாஅ வைப்பிற் | 15. | காமர் கிடக்கையவ ரகன்றலை நாடே. (63) |
திணையும் துறையும் அவை. அவரை அக்களத்திற் பரணர் பாடியது.
உரை: எனைப் பல் யானையும் - எத்துணையும் பலவாகிய யானையும்; அம்பொடு துளங்கி - அம்பால் கலங்கி; விளைக்கும் வினையின்றிப் படை யொழிந்தன - இனிமேலுண்டாக்கும் போரின்றிப் படையிடத்துப் பட்டன; விறற் புகழ் மாண்டபுரவி யெல்லாம் - வெற்றிப் புகழ் மாட்சிமைப்பட்ட குதிரையெல்லாம்; மறத்தகை மைந்தரொடு - ஆண்மைக்கேற்ற வீரப் பாட்டுக் கூற்றையுடைய மேலாட்களுடனே; ஆண்டுப் பட்டன - அக்களத்தே பட்டன; தேர் தர வந்த சான்றோர் எல்லாம் - தேர் கொடுவர வந்த போரிற் கமைந்தோ ரெல்லாம்; தோல் கண் மறைப்ப ஒருங்கு மாய்ந்தனர் - தாம் பிடித்த பரிசை தம் கண் மறைப்பச் சேரப் பட்டனர்; விசித்து வினை மாண்ட மயிர்க்கண் முரசம் - வாரால் விசிக்கப்பட்டுத் தொழில் மாட்சிமைப்பட்ட மயிர் சீவாது போர்க்கப்பட்ட கண்ணையுடைய முரச மெல்லாம்;பொறுக்குநர் இன்மையின் - பரிப்பார் படுதலான்; இருந்து விளிந்தன - இருந்து கெட்டன; சாந்தமை மார்பில் நெடு வெல் பாய்ந்தென - சாந்தமைந்த மார்பின்கண்ணே நெடிய வேல் பாய்ந்தெனவாக; வேந்தரும் பொருது களத்து ஒழிந்தனர் - அரசரும் பொருது அக்களத்தின்கண்ணே மடிந்தனர்; இனி என்னாவது கொல்தான் - இனி என்ன வருத்த முறுவதோ தான்; கழனி ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர் - கழனிக்கண் ஆம்பற்றண்டாற் செய்த வளையணிந்த கையினையுடைய மகளிர்; பாசவல் முக்கி - செவ்வி யவலை முக்கி; தண் புனல் பாயும் - குளிர்ந்த புனற்கண்ணே பாயும்; யாணர் அறாஅ வைப்பின் புதுவருவா யறாத |