பக்கம் எண் :

179

நுண்கோற் றகைத்த தெண்கண் மாக்கிணை
இனிய காண்கிவட் டணிகெனக் கூறி
5.வினவ லானா முதுவா யிரவல
தைஇத் திங்கட் டண்கயம் போலக்
கொளக்கொளக் குறைபடாக் கூழுடை வியனகர்
அடுதீ யல்லது சுடுதீ யறியா
திருமருந்து விளைக்கு நன்னாட்டுப் பொருநன்
10.கிள்ளி வளவ னல்லிசை யுள்ளி
நாற்ற நாட்டத் தறுகாற் பறவை
சிறுவெள் ளாம்பன் ஞாங்க ரூதும்
கைவள் ளீகைப் பண்ணன் சிறுகுடிப்
பாதிரி கமழு மோதி யொண்ணுதல்
15.இன்னகை விறலியொடு மென்மெல வியலிச்
செல்வை யாறிற் செல்வை யாகுவை
விறகொய் மாக்கள் பொன்பெற் றன்னதோர்
தலைப்பா டன்றவ னீகை
நினைக்க வேண்டா வாழ்கவன் றாளே. (70)

     திணையுந் துறையு மவை. அவனைக் கோவூர் கிழார் பாடியது.

     உரை: தேஎந் தீந்தொடைச் சீறி யாழ்ப் பாண - தேன் போல
இனிய நரப்புத்தொடை பொருந்திய சிறிய யாழையுடைய பாண; கயத்து
வாழ் யாமை காழ் கோத் தன்ன - கயத்தின்கண் வாழும் யாமையை
நாராசத்தின்கண்ணே கோத்தாற் போன்ற; நுண் கோல் தகைத்த தெண்
கண் மாக் கிணை - நுண்ணிய கோலாற் பிணிக்கப்பட்ட தெளிந்த
கண்ணையுடைய பெரிய உடுக்கை யோசை; இனிய காண்க இவண்
தணிக எனக் கூறி வினவல் ஆனா - இனிய காண்க, இவ்விடத்தே
சிறிது ஆறிப் போவீராக என்று சொல்லிப் பலவும் என்னை வினவுத
லமையாத; முது வாய் இரவல - முதிய வாய்மையுடைய இரவலனே!;
யான் சொல்லுவதனைக் கேட்பாயாக; தைஇத் திங்கள் தண் கயம்
போல - தைமாதத்தின்கட் குளிர்ந்த பொய்கையைப் போல; கொளக்
கொளக் குறைபடாக் கூழுடை வியனகர் - கொள்ளக் கொள்ளத்
தொலையாத சோற்றையுடைய அகன்ற நகரிடத்து; அடு தீ யல்லது சுடு
தீ யறியாது - அடு நெருப்பல்லது சுடு நெருப்பறியாது; இரு மருந்து
விளைக்கும் நன்னாட்டுப் பொருநன் - சோற்றையும் தண்ணீரையும்
விளைக்கும் நல்ல நாட்டுக்கு வேந்தன்; கிள்ளி வளவன் நல்லிசை
உள்ளி - கிள்ளி வளவனது நல்ல புகழை நினைத்து; நாற்ற