| | நுண்கோற் றகைத்த தெண்கண் மாக்கிணை இனிய காண்கிவட் டணிகெனக் கூறி | 5. | வினவ லானா முதுவா யிரவல | | தைஇத் திங்கட் டண்கயம் போலக் கொளக்கொளக் குறைபடாக் கூழுடை வியனகர் அடுதீ யல்லது சுடுதீ யறியா திருமருந்து விளைக்கு நன்னாட்டுப் பொருநன் | 10. | கிள்ளி வளவ னல்லிசை யுள்ளி | | நாற்ற நாட்டத் தறுகாற் பறவை சிறுவெள் ளாம்பன் ஞாங்க ரூதும் கைவள் ளீகைப் பண்ணன் சிறுகுடிப் பாதிரி கமழு மோதி யொண்ணுதல் | 15. | இன்னகை விறலியொடு மென்மெல வியலிச் | | செல்வை யாறிற் செல்வை யாகுவை விறகொய் மாக்கள் பொன்பெற் றன்னதோர் தலைப்பா டன்றவ னீகை நினைக்க வேண்டா வாழ்கவன் றாளே. (70) |
திணையுந் துறையு மவை. அவனைக் கோவூர் கிழார் பாடியது.
உரை: தேஎந் தீந்தொடைச் சீறி யாழ்ப் பாண - தேன் போல இனிய நரப்புத்தொடை பொருந்திய சிறிய யாழையுடைய பாண; கயத்து வாழ் யாமை காழ் கோத் தன்ன - கயத்தின்கண் வாழும் யாமையை நாராசத்தின்கண்ணே கோத்தாற் போன்ற; நுண் கோல் தகைத்த தெண் கண் மாக் கிணை - நுண்ணிய கோலாற் பிணிக்கப்பட்ட தெளிந்த கண்ணையுடைய பெரிய உடுக்கை யோசை; இனிய காண்க இவண் தணிக எனக் கூறி வினவல் ஆனா - இனிய காண்க, இவ்விடத்தே சிறிது ஆறிப் போவீராக என்று சொல்லிப் பலவும் என்னை வினவுத லமையாத; முது வாய் இரவல - முதிய வாய்மையுடைய இரவலனே!; யான் சொல்லுவதனைக் கேட்பாயாக; தைஇத் திங்கள் தண் கயம் போல - தைமாதத்தின்கட் குளிர்ந்த பொய்கையைப் போல; கொளக் கொளக் குறைபடாக் கூழுடை வியனகர் - கொள்ளக் கொள்ளத் தொலையாத சோற்றையுடைய அகன்ற நகரிடத்து; அடு தீ யல்லது சுடு தீ யறியாது - அடு நெருப்பல்லது சுடு நெருப்பறியாது; இரு மருந்து விளைக்கும் நன்னாட்டுப் பொருநன் - சோற்றையும் தண்ணீரையும் விளைக்கும் நல்ல நாட்டுக்கு வேந்தன்; கிள்ளி வளவன் நல்லிசை உள்ளி - கிள்ளி வளவனது நல்ல புகழை நினைத்து; நாற்ற
|