பக்கம் எண் :

182

அந்துவஞ் சாத்தனு மாத னழிசியும்
வெஞ்சின வியக்கனு முளப்படப் பிறரும்
15.கண்போ னண்பிற் கேளிரொடு கலந்த
இன்களி மகிழ்நகை யிழுக்கியா னொன்றோ
மன்பதை காக்கு நீள்குடிச் சிறந்த
தென்புலங் காவலி னொரீஇப்பிறர்
வன்புலங் காவலின் மாறியான் பிறக்கே. (71)

     திணை: காஞ்சி. துறை: வஞ்சினக் காஞ்சி. ஒல்லையூர் தந்த
பூதப்பாண்டியன் பாட்டு.

     உரை: மடங்கலிற் சினைஇ - சிங்கம் போலச் சினந்து; மடங்கா
உள்ளத்து அடங்காத் தானை வேந்தர் - மீளாத மேற்கோள்
பொருந்திய உள்ளத்தினையும் மிகைத்துச் செல்லும் படையையுமுடைய
வேந்தர்; உடங்கு இயைந்து - தம்மில் ஒப்பக் கூடி; என்னொடு
பொருதும் என்ப - என்னொடு பொருவேமென்று சொல்லுவர்; அவரை
ஆர் அமர் அலறத் தாக்கி - அவ்வேந்தரைப் பொறுத்தற்கரிய
போரின்கண்ணே அலறப் பொருது; தேரொடு அவர்ப்புறம்
காணேனாயின் - தேவருடனே அவருடைந் தோடும் புறக்கொடையைக்
கண்டிலேனாயின்; சிறந்த பேரமர் உண்கண் இவனினும் பிரிக -
எனக்குச் சிறந்த பெரியவாய் முகத்தோடு பொருந்தின மையுண்ட
கண்ணியையுடைய இவளினும் நீங்குவேனாக; அறன் நிலை திரியா
அன்பின் - அறமானது நிலை கலங்காத அன்பினையுடைய; அவையத்து
- அவைக்களத்து; திறனில் ஒருவனை நாட்டி - அறத்தின்
திறப்பாடில்லாத ஒருவனை வைத்து; முறை திரிந்து மெலிகோல்
செய்தே னாகுக - முறை கலங்கிக் கொடுங்கோல் செய்தே னாகுக;
மலி புகழ் வையை சூழ்ந்த வளங்கெழு வைப்பின் - மிக்க
புகழையுடைய வையையாற் சூழப்பட்ட செல்வம் பொருந்திய ஊர்களில்;
பொய்யா யாணர் மையல் கோமான் மாவனும் - பொய்யாத புது
வருவாயையுடைய மைய லென்னும் ஊர்க்குத் தலைவனான மாவனும்;
மன் னெயில் ஆந்தையும் - நிலைபெற்ற எயிலென்னு மூரையுடைய
ஆந்தையும்; உரைசால் அந்துவஞ் சாத்தனும் ஆதனழிசியும் -
புகழமைந்த அந்துவஞ் சாத்தனும் ஆதனழிசியும்; வெஞ்சின இயக்கனும்-
வெய்ய சினத்தையுடைய இயக்கனு மென; உளப்படப் பிறரும் -
இவருட்படப் பிறரும்; கண் போல் நண்பிற் கேளிரொடு கலந்த - எனது
காண்போலும் நண்பினையுடைய நட்டாரோடு கூடிய; இன் களி மகிழ்
நகை இழுக்கியான் - இனிய செருக்கையுடைய மகிழ்நகையைத்
தப்பியவனாகி; மன்பதை காக்கும் நீள் குடிச் சிறந்த - பல வுயிரையும்
பாதுகாக்கும் அசரர் குலத்திற்