| நெடுநல் யானையுந் தேரு மாவும் |
5. | படையமை மறவரு முடையம் யாமென் |
| றுறுதுப் பஞ்சா துடல்சினஞ் செருக்கிச் சிறுசொற் சொல்லிய சினங்கெழு வேந்தரை அருஞ்சமஞ் சிதையத் தாக்கி முரசமொ டொருங்ககப் படேஎ னாயிற் பொருந்திய |
10. | என்னிழல் வாழ்நர் சென்னிழற் காணாது |
| கொடியனெம் மிறையெனக் கண்ணீர் பரப்பிக் குடிபழி தூற்றுங் கோலே னாகுக ஓங்கிய சிறப்பி னுயர்ந்த கேள்வி மாங்குடி மருதன் றலைவ னாக |
15. | உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பிற் |
| புலவர் பாடாது வரைகவென் னிலவரை புரப்போர் புன்கண் கூர இரப்போர்க் கீயா வின்மையா னுறவே. (72) |