| உடைவளை கடுப்ப மலர்ந்த காந்தள் அடைமல்கு குளவியொடு கமழுஞ் சாரல் மறப்புலி யுடலின் மான்கண் முளவோ மருளின விசும்பின் மாதிரத் தீண்டிய |
5 | இருளு முண்டோ ஞாயிறு சினவின் |
| அச்சொடு தாக்கிப் பாருற் றியங்கிய பண்டச் சாகாட் டாழ்ச்சி சொலிய அரிமணன் ஞெமரக் கற்பக நடக்கும் பெருமிதப் பகட்டுக்குத் துறையு முண்டோ |
10 | எழுமரங் கடுக்குந் தாடோய் தடக்கை |
| வழுவில் வன்கை மழவர் பெரும இருநில மண்கொண்டு சிலைக்கும் பொருநரு முளரோ நீகளம் புகினே. (90) |