| திண்பிணி முரச மிழுமென முழங்கச் சென்றமர் கடத்தல் யாவது வந்தோர் தார்தாங் குதலு மாற்றார் வெடிபட் டோடன் மரீஇய பீடின் மன்னர் |
5 | நோய்ப்பால் விளிந்த யாக்கை தழீஇக் |
| காதன் மறந்தவர் தீதுமருங் கறுமார் அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர் திறம்புரி பசும்புற் பரப்பினர் கிடப்பி மறங்கந் தாக நல்லமர் வீழ்ந்த |
10 | நீள்கழன் மறவர் செல்வுழிச் செல்கென |
| வாள்போழ்ந் தடக்கலு முய்ந்தனர் மாதோ வரிஞிமி றார்க்கும் வாய்புகு கடாஅத் தண்ணல் யானை யடுகளத் தொழிய அருஞ்சமந் ததைய நூறிநீ |
15 | பெருந்தகை விழுப்புண் பட்ட மாறே. (93) |