பக்கம் எண் :

230

 

ஆழி சூட்டிய - சக்கரத்தை நடாத்திய; தொன்னிலை மரபின் நின்
முன்னோர்   போல - பழைய   நிலைமை   பொருந்திய
முறைமையையுடைய நின் குடியிற் பழையோரை யொப்ப; ஈகையங்
கழற்கால் - பொன்னாற்  செய்யப்பட்ட  வீரக் கழல் புனைந்த
காலினையும்; இரும் பனம் புடையல் - பெரிய பனந் தோடாகிய
தாரினையும்; பூவார் காவின் - பூ நிறைந்த காவினையும்; புனிற்றுப்
புலால் நெடு வேல் - நாடோறும் புதிய ஈரம் புலராத புலாலையுடைய
நெடிய  வேலினையுமுடைய;     எழு   பொறி - ஏழிலாஞ்சனையும்;
நாட்டத்து எழாஅத் தாயம் - நாடுதலையுடைய  ஒருநாளும் நீங்காத
அரசவுரிமையை; வழுவின்று எய்தியும்  அமையாய் - தப்பின்றாகப்
பெற்றும் அமையாய்; செரு வேட்டு இமிழ் குரல் முரசின் எழுவரொடு
முரணி - போரை  விரும்பி    யொலிக்கும்   ஓசை  பொருந்திய
முரசினையுடைய ஏழரசரோடு பகைத்து; சென்று மேற்சென்று; அமர்
கடந்து நின் ஆற்றல்  தோற்றிய  அன்றும் - போரின்கண் வென்று
நின்    வலியைத்  தோற்றுவித்த  அற்றை நாளும்; பாடுநர்க்கு
அரியை - பாடுவர்க்குப்  பாட  அரியை;  இன்றும் பரணன்
பாடினன் - இற்றை    நாளும்  பரணன்  பாடினன்; நீ முரண் மிகு
கோவலூர் நூறி - நீ மாறுபாடு மிக்க கோவலூரை யழித்து வென்று;
அரண் அடு திகிரி ஏந்திய தோள் - பிறவும் அரண்களை
யழிக்கின்ற  ஆழியைத் தாங்கிய தோளை எ-று.

     இன்றும் பரணன் பாடின னென்றது,  அவனும்  தன்  
பெருமையாற் பாடினான்;  பிறராற்   பாடப்படுத லரிதென்றதாம். நின்
ஆற்றல் தோற்றிய அன்றும்  பாடுநர்க் கரியை; திகிரி யேந்திய தோளை
இன்றும் பரணன் பாடினன்  எனக்  கூட்டுக.  கழற்  காலையும்
புடையலையும் காவையும் வேலையுமுடைய  நின்  முன்னோர்  போலத்
தாயமெய்தியும் அமையா யெனமாறிக்  கூட்டுக.  நாடுதல் - ஆய்தல்.
மூவரொடு முரணியென்றும் முரணடு திகிரி யென்றும் பாடம். கொல்: ஐயம்
மன்; அசைநிலை. பூவார் கா - வானோர்   இவன்  முன்னோர்க்கு  
வரம்  கொடுத்தற்கு வந்திருந்ததொருகா. இவனுக்குப் பனந்தார் கூறியது,
சேரமாற்கு உறவாதலின்.எழுபொறி  நாட்டமென்பதற்கு  ஏழரசர்  நாடுங்  
கூடி ஒரு நாடாய் அவ்வேழரசர் பொறியும் கூடிய பொறியோடு கூடிநின்று
நன்மையும் தீமையு மாராய்தலெனினு மமையும்.

      விளக்கம்: அருத்துதல் - உண்பித்தல். இவண் தந்தெனவே,
கரும்பு இருந்த விடம் அவணாகிய விண்ணுலக மெனப்பட்டது. வழிமுறை
தொடர்பறாது வருதல்பற்றித் “தொன்னிலை மரபு”என்றார். ஈகை - பொன்.
புடையல் மாலை. நாடோறும் பகைரைக் குத்திக் குருதிக் கறை தோய்ந்து
புலால் நாறுதலால், “புனிற்றுப் புலால் நெடுவேல்”என்றார். அரணடு திகிரி
யென்புழித் திகிரி யென்றது, ஆழிப்படை போலும். எழு பொறி யென்றது,
ஏழ்வகை இலாஞ்சனையை; அவை. கேழல் மேழி கலை ஆளி வீணை
சிலை  கெண்டை”(கலிங். கடவுள்.18) என்பன.