பக்கம் எண் :

235

 

இருள் யாவணது - ஆதலின், நின் நிழற்கண் வாழுமவர்கட்குத்
துன்பமாகிய இருள் எவ்விடத்துள்ளது? எ-று.

     திங்கள் நாள் நிறை மதியத் தனையை யென்றது, அறிவும் நிறையும்
அளுரு முதலாகிய குணங்களா லமைந்தா யென்றவாறாம். சேம வச்சன்ன
வென்றது, ஏற்றிழிவுடையவழி அச்சு முறிந்துழிச் சேமவச்சு உதவினாற்போல
நீ காக்கின்ற நாட்டிற்கு ஓரிடையூறுற்றால் அது நீக்கிக் காத்தற்குரியை
யென்பதாம். ‘எருதே இளைய நுகமுண ராவே, சகடம் பண்டம் பெரிதுபெய்
தன்றே’ யென்பது உவமங் கருதாது, சகடத்திற்கு வரும் ஏதம் குறித்து,
உமணர் சேமவச்சு யாத்தற்குக் காரணமாய் நின்றது.

     விளக்கம்: “எருது இளையவாகலின் நுக முணரா; பண்டம் மிகப்
பெய்யப் பெற்றுளது; அவண் நிகழ்வதனை யாவர் அறிகுவ”ரென்பது
உமணர் தம்முட் கருதிக் கூறும் கூற்று. இக்கருத்து உமணர் சேமவச்சு
யாத்துக்      கோடற்கு    ஏதுவாய்    நிற்றலின்,     உரைகாரர்,
“எருதே.........காரணமாய் நின்றது”என்றார். கீழ் மரம், அச்சு மரம்.
“இசை விளங்கு நெடியோய்”என்பவர், பொகுட்டெழினியின் கொடை
நலம் தோன்றுதற்குக் “கவி கை  நெடியோய்”என்று சிறப்பித்தார்.
“அரம்பையின் கீழ்க் கன்றும் கனி யுதவும்”என்று கூறும் நன்னெறிக்கு
இவன் தக்க சான்றாதல் இதனால் விளக்கமுறும். அவல், பள்ளம்; மிசை.
மேடு அவண் உறும் இடையூற்றிணை “அவணது”என்றார். உறுவது
அறிபவர் அரியராதலின், “அறியுநர் யார்”என்றார். நாள் நிறை
மதியம் - நாடோறும் வளர்ந்து நிறையும் முழுத் திங்கள். கலை நிரம்பிய
திங்களை மதியமென வழங்குப. முழுத் திங்கள் தண்ணிய நிலவை மிகப்
பொழிந்து இருளைப் போக்குதலின், “இருள் யாவணது”என்றார். முழுத்
திங்களை அவற் குவமை கூறினமையின், அவன் செய்யும் அருள்
தண்ணிலவும்   அவன்    தாணிழலில்    வாழ்வார்க்    கெய்தும்

துன்பம் இருளுமாயின. கீழ்மரத் தச் சிருப்பவும் சேமவச்சுக் கொண்டது
கூறியதனால், அதியமானஞ்சி யிருப்பவும், பொகுட்டெழினி அவற்குத்
துணையாய் இருந்தானென்பது தெள்ளிதாம்.

               103. அதியமான் நெடுமான் அஞ்சி

     அதியமான்பால் பரிசில் பெற்றுச் சென்ற ஒளவையார், வழியில் ஒரு
சுரத்தில் தன் சுற்றத்தோடு போந்து தங்கியிருந்த விறலி யொருத்தியைக்
கண்டார். அவள் தான் உற்று வருந்தும் வறுமையைத் தெரிவித்து,
“கவிழ்ந்துகிடக்கும் உண்கலமாகிய என் மண்டையை மலர்க்குநர் யார்?”
என ஏங்கியிருப்பது கண்டு, “சில்வளை விறலி, சேய்மைக்கண்ணன்றி

அண்மையிலேயே நெடுமானஞ்சி யுள்ளான்; அவன்பாற் செல்வையாயின்,
அவன் பகைப்புலத்துத் திறையாகக் கொண்ட பொருள் நிரம்ப வுடையன்;
அலத்தற்காலையாயினும் புரத்தல் வல்லன்; அவன் பாற் செல்க”என,
இதனால் ஆற்றுப்படுத்துள்ளார்.

 ஒருதுலைப் பதலை தூங்க வொருதலைத்
தூம்பகச் சிறுமுழாத் தூங்கத் தூங்கிக்
கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யாரெனச்