| | சுரனமுத லிருந்த சில்வளை விறலி | 5 | செல்வை யாயிற் சேணோ னல்லன் | | முனைசுட வெழுந்த மங்குன் மாப்புகை மலைசூழ் மஞ்சின் மழகளி றணியும் பகைப்புலத் தோனே பல்வே லஞ்சி பொழுதிடைப் படாஅப் புலரா மண்டை | 10 | மெழுகுமெல் லடையிற் கொழுநிணம் பெருப்ப | | அலத்தற் காலை யாயினும் புரத்தல் வல்லன் வாழ்கவன் றாளே. (103) |
திணை: அது. துறை: விறலியாற்றுப்படை. அதியமானெடுமா னஞ்சியை அவர் பாடியது.
உரை: ஒரு தலை பதலை தூங்க - காவினது ஒருதலைக் கண்ணே பதலை தூங்க; ஒரு தலை - ஒரு தலைக்கண்ணே; தூம்பகச் சிறு முழாத் தூங்கத் தூங்கி - துளையை யகத்தேயுடைய சிறிய முழாவைத் தூங்கும் பரிசு தூக்கி; கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யார் என - இடுவோ ரின்மையின் ஏலாது கவிழ்ந்த என் மண்டையை இட்டு மலர்த்த வல்லார் யார் எனச் சொல்லி; சுரன் முதல் இருந்த சில் வளை விறலி - சுரத்திடத்தே யிருந்த சிலவாகிய வளையையுடைய விறலி; செல்வை யாயின் - நீ அவன்பாற் போவையாயின்; சேணோன் அல்லன் - அவன் சேய்மைக்கண்ணானல்லன்; முனை சுட எழுந்த மங்குல் மாப் புகை - முனைப் புலத்தைச் சுடுதலா னெழுந்த இருட்சியையுடைய கரிய புகை; மலை சூழ் மஞ்சின் மழ களிறு அணியும் - மலையைச் சூழும் முகில் போல இளங்களிற்றைச் சூழும்; பகைப்புலத்தோன் - பகைவர் தேயத் திருந்தான்; பல்வேல் அஞ்சி - பல வேற்படையையுடைய அதியமான்; பொழுது இடைப் படாஅ - ஒருபொழுதும் ஓயாமல்; புலரா மண்டை - உண்ணவும் தின்னவும் படுதலான் ஈரம் புலராத மண்டை; மெழுகு மெல்லடையின் கொழு நிணம் பெருப்ப - மெழுகான் இயன்ற மெல்லிய அடை போலக் கொழுத்த நிணம் மிக; அலத்தற் காலை யாயினும் - உலகம் வறுமையுறுதலையுடைய காலமாயினும்; புரத்தல் வல்லன் - பாதுகாத்தலை வல்லன்; அவன் தாள் வாழ்க - அவன் தாள் வாழ்க எ-று.
பதலை யென்பது ஒருதலை முகமுடைய தொரு தோற்கருவி. பகைப்புலத்தோ னென்ற கருத்து, பகைவர்பால் திறைகொண்ட பொருளுடையனாதலின், நீ வேண்டிய வெல்லாந் தருதல் அவனுக்கெளி தென்பதாம். உம்மை: சிறப்பு. சேணோ னல்ல னென்பதற்குப் பரிசில் நீட்டிபானல்லன் என்று உரைப்பினு மமையும்.
|