பக்கம் எண் :

236

 
 சுரனமுத லிருந்த சில்வளை விறலி
5செல்வை யாயிற் சேணோ னல்லன்
 முனைசுட வெழுந்த மங்குன் மாப்புகை
மலைசூழ் மஞ்சின் மழகளி றணியும்
பகைப்புலத் தோனே பல்வே லஞ்சி
பொழுதிடைப் படாஅப் புலரா மண்டை
10மெழுகுமெல் லடையிற் கொழுநிணம் பெருப்ப
 அலத்தற் காலை யாயினும்
புரத்தல் வல்லன் வாழ்கவன் றாளே.  (103)


     திணை: அது.  துறை:  விறலியாற்றுப்படை. அதியமானெடுமா
னஞ்சியை அவர் பாடியது.

     உரை: ஒரு  தலை  பதலை  தூங்க - காவினது  ஒருதலைக்
கண்ணே பதலை தூங்க; ஒரு தலை - ஒரு தலைக்கண்ணே;
தூம்பகச் சிறு முழாத் தூங்கத் தூங்கி - துளையை
யகத்தேயுடைய சிறிய முழாவைத் தூங்கும் பரிசு தூக்கி; கவிழ்ந்த
மண்டை மலர்க்குநர் யார் என - இடுவோ ரின்மையின் ஏலாது
கவிழ்ந்த என் மண்டையை இட்டு மலர்த்த வல்லார் யார் எனச்
சொல்லி; சுரன் முதல் இருந்த சில் வளை விறலி - சுரத்திடத்தே
யிருந்த சிலவாகிய வளையையுடைய  விறலி; செல்வை யாயின் - நீ
அவன்பாற் போவையாயின்; சேணோன் அல்லன் - அவன்
சேய்மைக்கண்ணானல்லன்;  முனை சுட எழுந்த மங்குல் மாப்
புகை - முனைப் புலத்தைச் சுடுதலா னெழுந்த இருட்சியையுடைய
கரிய புகை; மலை சூழ் மஞ்சின் மழ களிறு அணியும் - மலையைச்
சூழும் முகில் போல இளங்களிற்றைச் சூழும்; பகைப்புலத்தோன் -
பகைவர் தேயத் திருந்தான்; பல்வேல் அஞ்சி - பல
வேற்படையையுடைய அதியமான்; பொழுது இடைப் படாஅ -
ஒருபொழுதும் ஓயாமல்; புலரா மண்டை - உண்ணவும் தின்னவும்
படுதலான் ஈரம் புலராத மண்டை; மெழுகு மெல்லடையின் கொழு
நிணம் பெருப்ப - மெழுகான் இயன்ற மெல்லிய அடை போலக்
கொழுத்த நிணம் மிக; அலத்தற் காலை யாயினும் - உலகம்
வறுமையுறுதலையுடைய காலமாயினும்; புரத்தல் வல்லன் -
பாதுகாத்தலை வல்லன்; அவன் தாள் வாழ்க - அவன்
தாள் வாழ்க எ-று.

    
பதலை யென்பது ஒருதலை முகமுடைய தொரு தோற்கருவி.
பகைப்புலத்தோ னென்ற கருத்து, பகைவர்பால் திறைகொண்ட
பொருளுடையனாதலின், நீ வேண்டிய வெல்லாந் தருதல் அவனுக்கெளி
தென்பதாம். உம்மை: சிறப்பு. சேணோ னல்ல னென்பதற்குப் பரிசில்
நீட்டிபானல்லன் என்று உரைப்பினு மமையும்.