பக்கம் எண் :

248

 

      திங்களை மாத மென்பாரு முளர். ஒருவனை மூவேந்தரும்
முற்றியிருந்தும், வஞ்சித்துக் கொன்றமையின் “வென்றெறி முரசின் வேந்த”
ரென்றது, ஈண்டு இகழ்ச்சிக் குறிப்பு.

      விளக்கம்: தந்தையையுங் குன்றையு மிழந்து தனிமைத் துயருழக்கு
மகளிர், இழவாமுன் இருந்த நிலையினையும் உடன் நினைந்து வருந்துமாறு
தோன்ற, “அற்றைத் திங்கள்.....கொளார்”என்றார். “வென்றெறி முரசின்
வேந்தர்”என்றது, நல்வழியால் வென்று முழக்குதற்குரிய முரசினை,
அல்வழியால் பாரியைக் கொன்று முழக்குகின்றமை தோன்ற நின்றமையின்,
இகழ்ச்சிக் குறிப்பினை யுடையதாயிற்று.

                     113. வேள் பாரி

     வேள் பாரிக்கு மகளிர் இருவர் உண்டு. அவன் மூவேந்தர்
சூழ்ச்சியால்இறந்தபோது அவர்கள் மணப்பருவ மெய்தியிருந்தனராதலால்,
அவர்களைத் தக்க பாதுகாப்பமைந்த இடத்தில் வைத்துத் தமிழ்நாட்டு
வேந்தர்க்கு திருமணம் செய்விப்பது தமது கடனாமெனக் கருதி, வேள் பாரி
இறந்ததும், கபிலர், அவர்களை யழைத்துச் செல்வாராயினர். செல்பவர்,
பார்ப்பாரிடை, வைத்த பொருட்கும் பார்ப்பார்க்கும் ஏதம் செய்தலாகா
தென்ற அக்கால அரசியன் முறைப்படி அம் மகளிரைப் பார்ப்பாரிடை
அடைக்கலப்படுத்தக் கருதிச் செலவு மேற்கொண்டார். அந்நாளில்
பார்ப்பாரைத் தீண்டாமைப் பேய் பிடிக்கவில்லை. பறம்பு நாட்டைப்
பிரியுங்கால், இதுகாறும் தமக்கு உணவும் உறையுளும் நல்கியின்புறுவித்த
பறம்பினது நன்றியினை அவரால் மறக்க முடியவில்லை. அதனால்
அவருளத்தே பிரிவாற்றாமை தோன்றிப் பேதுறுவித்தது. நெஞ்சு கலங்கிற்று.
புலம்பும் பெரிதாயிற்று. அப் புலம்புரையே இப் பாட்டு.

 மட்டுவாய் திறப்பவு மையிடை வீழ்ப்பவும்
அட்டான் றானாக் கொழுந்துவை யூன்சோறும்
பெட்டாங் கீயும் பெருவளம் பழுனி
நட்டனை மன்னோ முன்னே யினியே
5பாரி மாய்ந்தெனக் கலங்கிக் கையற்று
 நீர்வார் கண்ணேந் தொழுதுநிற் பழிச்சிச்
சேறும் வாழியோ பெரும்பெயர்ப் பறம்பே
கோறிரண் முன்கைக் குறுந்தொடி மகளிர்
நாறிருங் கூந்தற் கிழவரைப் படர்ந்தே.  
(113)  

     திணையுந் துறையு மவை. அவன் மகளிரைப் பார்ப்பார்ப்
படுக்கக் கொண்டுபோவான் பறம்பு விடுத்த கபிலர் பாடியது.

     உரை: மட்டு வாய் திறப்பவும் - மதுவிருந்த சாடியை வாய்
திறப்பவும்; மைய விடை வீழ்ப்பவும் - ஆட்டுக் கிடாயை
வீழ்ப்பவும்;அட்டு ஆன்று