பக்கம் எண் :

279

 
 முன்னுள்ளு வோனைப் பின்னுள்ளி னேனே
ஆழ்கென் னுள்ளம் போழ்கென் னாவே
பாழூர்க் கிணற்றிற் றூர்கவென செவியே
நரந்தை நறும்புண் மேய்ந்த கவரி
5குவளைப் பைஞ்சுனை பருகி யயல
 தகரத் தண்ணிழற் பிணையொடு வதியும்
வடதிசை யதுவே வான்றோ யிமயம்
தென்றிசை யாஅய்குடி யின்றாயிற்
பிறழ்வது மன்னோவிம் மலர்தலை யுலகே.
(132)

     திணையும் துறையு மவை. அவனை அவர் பாடியது.

     உரை : முன் உள்ளுவோனைப் பின் உள்ளினேன் -
யாவரினும் முன்னே  நினைக்கப்படுமவனைப்  பின்பே நினைந்தேன்
யான்; என் உள்ளம் ஆழ்க - அவ்வாறு நினைந்த குற்றத்தால்
எனதுள்ளம் அமிழ்ந்திப் போவதாக; என் நா போழ்க - அவனை
யன்றிப் பிறரைப் புகழ்ந்த நாவும் கருவியாற் பிளக்கப்படுவதாக; என்
செவி பாழ் ஊர்க் கிணற்றின் தூர்க - அவன் புகழன்றிப் பிறர்
புகழைக் கூறக்கேட்ட எனது செவியும் பாழ்பட்ட வூரின்கண் கிணறு
போலத் தூர்வதாக; நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி -
நரந்தையையும் நறிய புல்லையும் மேய்ந்த கவரிமா; குவளைப்
பைஞ்சுனை பருகி - குவளைப் பூவையுடைய பசிய சுனையின் நீரை
நுகர்ந்து; அயல தகரத் தண்ணிழல் பிணையொடு வதியும் - அதன்
பக்கத்தவாகிய தகரமரத்தினது குளிர்ந்த நிழலின்கண் தனது
பிணையுடனே தங்கும்; வடதிசையது வான் தோய் இமயம் - வட
திசைக்கண்ணதாகிய வானைப் பொருந்தும் இமய மலையும்;
தென்திசை ஆய் குடி இன்றாயின் - தென்றிசைக்கண் ஆய் குடியும்
இல்லையாயின்; இம் மலர்தலை யுலகு பிறழ்வது மன் - இந்தப்
பரந்த இடத்தையுடைய உலகம் கீழ் மேலதாகிக் கெடும் எ-று.

    முன்னுள்ளுவோனைப் பின்னுள்ளினேன் என் உள்ளம் ஆழ்தற்குக்
காரணம் கூறினமையான், பிறரைப் புகழ்ந்த நாவெனவும் பிறர் புகழ் கேட்ட
செவியெனவும் ஏனையவற்றிற்கும் காரணம் வருவித்துரைக்கப்பட்டது. அன்றி,
வடதிசை, தேவருலகோ டொத்தலான் இமயத்தால் தாங்க வேண்டுவதில்லை;
தென்றிசைக்கண் ஆய் குடி தாங்கிற்றில்லை யாயின் இவ்வுலகு பிறழும்;
அதனால் இமயத்துக்கு முன்னுள்ளப்படுவோனைப் பின்னுள்ளினேனாதலால்,
எனதுள்ளம் ஆழ்க; எனது நா போழ்க; எனது செவி தூர்வதாக
வென்றதாக்கி உரைப்பினு மமையும்.

    விளக்கம் :இமயத்தின்கண் கவரிமான் நரந்தை நறும்புல் மேய்ந்து
சுனைநீர் பருகித் தகரத் தண்ணிழல் வதியும் என இவர் கூறியது போலக்
குமட்டூர்க் கண்ணனார்,