| கொடுவரி வழங்குங் கோடுயர் நெடுவரை அருவிடர்ச் சிறுநெறி யேறலின் வருந்தித் தடவரல் கொண்ட தகைமெல் லொதுக்கின் வளைக்கை விறலியென் பின்ன ளாகப் |
5 | பொன்வார்ந் தன்ன புரியடங்கு நரம்பின் |
| வரிநவில் பனுவல் புலம்பெயர்ந் திசைப்பப் படுமலை நின்ற பயங்கெழு சீறியாழ் ஒல்க லுள்ளமொ டொருபுடைத் தழீஇப் புகழ்சால் சிறப்பினின் னல்லிசை யுள்ளி |
10 | வந்தனெ னெந்தை யானே யென்றும் |
| மன்றுபடு பரிசிலர்க் காணிற் கன்றொடு கறையடி யானை யிரியல் போக்கும் மலைகெழு நாடன் மாவே ளாஅய் களிறு மன்றே மாவு மன்றே |
15 | ஒளிறுபடைப் புரவிய தேரு மன்றே |
| பாணர் பாடுநர் பரிசில ராங்கவர் தமதெனத் தொடுக்குவ ராயி னெமதெனப் பற்ற றேற்றாப் பயங்கெழு தாயமொ டன்ன வாகநின் னூழி நின்னைக் |
20 | காண்டல் வேண்டிய வளவை வேண்டார் |
| உறுமுரண் கடந்த வாற்றற் பொதுமீக் கூற்றத்து நாடுகிழ வோயே. (135) |