பக்கம் எண் :

283

 
 கொடுவரி வழங்குங் கோடுயர் நெடுவரை
அருவிடர்ச் சிறுநெறி யேறலின் வருந்தித்
தடவரல் கொண்ட தகைமெல் லொதுக்கின்
வளைக்கை விறலியென் பின்ன ளாகப்
5பொன்வார்ந் தன்ன புரியடங்கு நரம்பின்
 வரிநவில் பனுவல் புலம்பெயர்ந் திசைப்பப்
படுமலை நின்ற பயங்கெழு சீறியாழ்
ஒல்க லுள்ளமொ டொருபுடைத் தழீஇப்
புகழ்சால் சிறப்பினின் னல்லிசை யுள்ளி
10வந்தனெ னெந்தை யானே யென்றும்
 மன்றுபடு பரிசிலர்க் காணிற் கன்றொடு
கறையடி யானை யிரியல் போக்கும்
மலைகெழு நாடன் மாவே ளாஅய்
களிறு மன்றே மாவு மன்றே
15ஒளிறுபடைப் புரவிய தேரு மன்றே
 பாணர் பாடுநர் பரிசில ராங்கவர்
தமதெனத் தொடுக்குவ ராயி னெமதெனப்
பற்ற றேற்றாப் பயங்கெழு தாயமொ
டன்ன வாகநின் னூழி நின்னைக்
20காண்டல் வேண்டிய வளவை வேண்டார்
 உறுமுரண் கடந்த வாற்றற்
பொதுமீக் கூற்றத்து நாடுகிழ வோயே.
 (135)

     திணை : அது. துறை : பரிசிற்றுறை. அவனை அவர் பாடியது.

     உரை : கொடு வரி - வழங்கும் கோடுயர் நெடு வரை - புலி
இயங்கும் சிகர முயர்ந்த நெடிய மலையின்கண்; அரு விடர் சிறு
நெறி ஏறலின் - ஏறுதற்கரிய பிளப்பின்கண் சிறிய வழியை
யேறுதலான்; வருந்தி - வருத்தமுற்று; தடவரல் கொண்ட - உடல்
வளைவைப் பொருந்திய; தகை மெல் ஒதுக்கின் - பயில அடியிட்டு
நடக்கின்ற மெல்லிய நடையினையுடைய; வளைக் கை விறலி என்
பின்னளாக - வளையணிந்த கையையுடைய விறலி என் பின்னே வர;
பொன் வார்ந்தன்ன - பொன்னைக் கம்பியாகச் செய்தாற்போன்ற;
புரி அடங்கு நரம்பின் - முறுக்கடங்கிய நரம்பினையுடைய; வரி
நவில் பனுவல் புலம் பெயர்ந்து இசைப்ப - வரிப் பொருண்மையோடு
பயிலும் பாட்டு நிலந்தோறு மாறி மாறி யொலிப்ப; படுமலை நின்ற
பயம் கெழு சீறி யாழ் - படுமலைப் பாலை நிலைபெற்ற பயன்
பொருந்திய சிறிய யாழை;