| பெயல்கண் மாறிய வுவகையர் சாரற் | 5 | புனைத்தினை யயிலு நாட சினப்போர்க் | | கைவள் ளீகைக் கடுமான் பேசு யார்கொ லளிய டானே நெருநற் சுரனுழந்து வருந்திய வொக்கல் பசித்தெனக் குணில்பாய் முரசி னிரங்கு மருவி | 10 | நளியிருஞ் சிலம்பிற் சீறூ ராங்கண் | | வாயிற் றோன்றி வாழ்த்தி நின்று நின்னுநின் மலையும் பாட வின்னா திகுத்த கண்ணீர் நிறுத்தல் செல்லாள் முலையக நனைப்ப விம்மிக் | 15 | குழலினை வதுபோ லழுதனள் பெரிதே. (143) |
திணை : பெருந்திணை. துறை : குறுங்கலி; தாபத நிலையுமாம். அவனால் துறக்கப்பட்ட கண்ணகி காரணமாக அவனைக் கபிலர் பாடியது.
உரை : மலை வான் கொள்க என - மலையை மழை வந்து சூழ்க வென்று; உயர் பலி தூஉய் - மிக்க பலியைத் தூவி; மாரி ஆன்று மழை மேக்கு உயர்க வென - அம் மழை மிகப் பெய்தலான் அப் பெயல் அமைந்து முகில் மேலே போவதாக வேண்டுமென; கடவுள் பேணிய குறவர் மாக்கள் - தெய்வத்தைப் போற்றிய குறமாக்கள்; பெயல் கண் மாறிய உவகையர் - மழை இடத்து மாறிய உவகையராய்; சாரல் புனத் திணை அயிலும் நாட - மலைச் சாரற்கண்புனத்தினையை யுண்ணும் நாட; சினப் போர் - சினத்தினாற் செய்யும் போரையும்; கைவள் ஈகை - கை வண்மையாற் கொடுக்கும் கொடையினையு முடைய; கலிமான் பேக - விரைந்த குதிரையையுடைய பேக; அளியள் யார் கொல் - அவ் வருளத்தக்காள் யாரோதான்; நெருநல் - நேற்று; சுரன் உழந்து வருந்திய ஒக்கல் பசித்தென - சுரத்தின்கண்ணே நடந்து வருந்திய எனது சுற்றம் பசித்ததாக; குணில் பாய் முரசின் - கடிப்பு அறையப்பட்ட முரசு போல; இரங்கும் அருவி - ஒலிக்கப்பட்ட அருவியையுடைய; நளி இருஞ் சிலம்பின் சீறூராங்கண் - பெரிய உயர்ந்த மலைக்கண் சிறிய ஊராகிய அவ்விடத்து; வாயில் தோன்றி - வாயிற்கண்ணே வந்து தோன்றி; வாழ்த்தி நின்று நின்னும் நின் மலையும் பாட - வாழ்த்தி நின்று நின்னையும் நின் மலையையும் பாட; இன்னாது இகுத்த கண்ணீர் - அப்பொழுது இன்னாதாகச் சொரியப்பட்ட கண்ணீரை; நிறுத்தல் செல்லாள் - ஒழித்தல் மாட்டாளாய்; முலையகம் நனைப்ப விம்மி - முலையிடத்தை நனைப்பப் பொருமி; குழல் இனைவது போல |