| ஓய்யென-கடிதாக; தான் ஞெலி தீயின் விரைவனன் சுட்டு - தான் கடைந்த தீயான் விரைந்து சுட்டு; நின் இரும் பேர் ஒக்கலொடு தின்ம் எனத் தருதலின் - நினது மிகப் பெரிய சுற்றத்துடனே தின்மி னென்று தருதலான்; அமிழ்தின் மிசைந்து காய் பசி நீங்கி அதனை யாங்கள் அமிழ்துபோலத்தின்று சுடுகின்ற பசி தீர்ந்ததாக; நன் மரன் நளிய நறுந் தண் சாரல் கல் மிசை அருவி தண்ணெனப் பருகி - நல்ல மரச்செறிவையுடைய நறிய குளிர்ந்த மலைச் சாரற்கண் மலையுச்சியினின்றும் வீழ்ந்த அருவிநீரைக் குளிரக் குடித்து; விடுத்தல் தொடங்கினேனாக - விடைக்கொள்ளத் தொடங்கினேனாக; வல்லே - விரைய வந்து; பெறுதற்கரிய வீறுசால் நன்கலம் - பெறுதற்கரிய பெருமை யமைந்த நல்ல அணிகலங்கள் தருதற்கு; பிறிதொன்றில்லை காட்டு நாட்டேம் என - வேறொன்றில்லை யாம் காட்டு நாட்டின் கண்ணேம் எனச் சொல்லி; மார்பிற் பூண்ட வயங்கு காழ் ஆரம் - தனது மார்பிற் பூணப்பட்ட விளங்கிய முத்து வடங்களையுடைய ஆரத்தை; மடை செறி முன் கைக் கடகமொடு ஈத்தனன் - கொளுத்துச் செறிந்த முன்கைக் கணிந்த கடகத்துடனே தந்தனன்; எந்நாடோ என நாடும் சொல்லான் - நும்முடைய நாடு எந் நாடோ என்று கேட்ப நாடும் சொல்லிற்றிலன்; யாரீரோ எனப் பேரும் சொல்லான் - நீர் யாரெனக் கேட்பப் பெயரும் சொல்லிற்றிலன்; பிறர்பிறர் கூற வழிக் கேட்டிசின் - அவன் நாடும் பெயரும் பிறர் பிறர் வழியின் கண்ணே சொல்லக்கேட்டேன் யான்; இரும்பு புனைந் தியற்றாப் பெரும் பெயர்த் தோட்டி - இரும்பாற் புனைந்து செய்யப்படாத மிக்க புழையுடைய தோட்டியாகிய; அம் மலை காக்கும்- அம் மலையைக் காக்கும்; அணி நெடுங் குன்றின் - அழகிய பெரியபக்கமலையினையும்; பளிங்கு வகுத்தன்ன தீ நீர் - பளிங்கை வகுத்தாற்போன்ற வெளிய நிறத்தையுடைய இனிய நீரையுமுடைய; நளிமலை நாடன் நள்ளி அவன் என - பெரிய மலைநாட்டையுடைய நள்ளி அவன் என எ-று.
நீங்கி - நீங்க. பலவு முதற் பொருந்தித் தொழுதனென் எனவும், மலை காக்கும் நள்ளி யெனவும் இயையும். அவன் நள்ளி யெனப் பிறர் பிறர் கூறவழிக் கேட்டிசின் எனக் கூட்டுக.
விளக்கம்: அழுக்கேறிக் கிழிந்திருக்கும் உடை நீரில் நனைந்த பருந்தின் சிறகுபோல இருக்கும்; இதனைப் பிறரும், நீர்ப்படு பருந்தின் இருஞ்சிற கன்ன, நிலத்தின் சிதாஅர்(பதிற்.12) என்பர். வருத்தமும் உலைவும் முறையே செல்வா னுளவாகிய வருத்தத்தையும் வறுமைத் துன்பத்தையும் குறித்துநின்றன. கழற்காலும் மணிவிளங்கும் சென்னியுமுடைய செல்வத் தோன்றல் என இயையும். |