பக்கம் எண் :

317

 

     ஒருகால் குடக்கோ இளஞ்சேர லிரும்பொறை, சோழ பாண்டிய
ரொடு கூடிப் பொருத விச்சிக்கோவை வென்று வீழ்த்தினா னெனப்
பதிற்றுப்பத்திலுள்ள ஒன்பதாம் பத்தின் பதிகம் கூறுகிறது. பாரி மகளிரை
மணஞ்செய்து கொள்ளுமாறு கபிலரால் வேண்டிக் கொள்ளப்பட்ட
வேந்தருள் விச்சிக்கோவும் ஒருவன்; அவனை அக்காலை அவர்,
“நிணந்தின்று செருக்கிய நெருப்புத்தலை நெடுவேல், களங்கொண்டு கனலும்
கடுங்கண் யானை, விளங்குமணிக் கொடும்பூண் விச்சிக் கோ”(புறம்.200)
எனப் பாராட்டியுள்ளார். ஒருகால், இவ் விச்சிக் கோக்களில் ஒருவன்
பெருவேந்தர் மூவருடன் போரிட்டு வீழ்ந்தான்.அவனால் அலைக்கப்பட்ட
குறும்பூர் என்னும் ஊரிலுள்ளார் பேராரவாரம் செய்தனரென்பதை,
“வில்கெழு தானை விச்சியர் பெருமகன், வேந்தரொடு பொருத ஞான்றைப்
பாணர், புலிநோக் குறழ்நிலை கண்ட கலிகெழு, குறும்பூ ரார்ப்பினும்
பெரிது’’(குறுந்.328) எனப் பரணர் கூறியுள்ளார்.

     இனி, பெருந்தலைச் சாத்தனா ரென்னும் சான்றோர் பெருந்தலை
யென்னும் ஊரினர். இப் பெயரால் தமிழகத்திற் பலவூர்க ளுண்மையின்,
இவர் இன்ன நாட்டின ரெனத் துணிய முடியவில்லை. அகநானூற்றுப்
புலவர் நிரலில் இவர் பெயர் ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலைச்
சாத்தனாரென்று (224) காணப்படுதலின், இவர் தந்தை ஆவூர் மூலங்கிழார்
என்பதும், இவரின் பெற்றோர் இருந்தது ஆவூர் மூலமென்பதும், இவர்
வாழ்ந்தது பெருந்தலை யென்பதும் துணிபாம். இவர்க்குத் தலை
பெருத்திருந்த காரணத்தால், பெருந்தலைச் சாத்தனாரெனப்பட்டாரென்பாரு
முண்டு. இவர் புலமை சிறந்து மேம்படுங்கால், வறுமையுற்றுக் கோடைமலைத்
தலைவனும் பண்ணி யென்பாற்குப் பின் வந்தோனுமாகிய கடிய நெடு
வேட்டுவ னென்னும் செல்வனைக் கண்டு பரிசில் கேட்ப, அவன் பரிசில்
நீட்டித்தான்; பின்னர் அவர் சேரமான் ஒருவனால் பல்பிடுங்கப்பட்ட
மூவனென்பான் பாலும் பரிசில் பெறாது வருந்திச் சென்றார். முடிவில்
முதிரமலைக்குரிய குமண வள்ளலைக் காட்டிற் கண்டு பாடி, அவன்
தலைதருவான் வாளீய அதுபெற்றுச் சென்று இளங்குமணனைக் கண்டு
வாளைக் காட்டி இருவரையும் பண்டுபோல் அன்புகொள்ளச் செய்து
சிறப்புற்றார். கடிய நெடுவேட்டுவற்கு முன்பிருந்த பண்ணியென்பான்
பாண்டி வேந்தற்குத் தானைத் தலைவனென்றும், அவன் வேள்வி செய்து
விழுப்பமுற்றதை, “வரைநிலை யின்றி இரவலர்க் கீயும், வள்வா யம்பிற்
கோடைப் பொருநன், பண்ணி தைஇய பயங்கெழு வேள்வி”(அகம்.13)
யென்றும் கூறுவர். இவர், காதலர்ப் பிரிதலினும் கொடிது இன்மையது
இளிவு என்பதும், ஆடவன் ஒருவன் போர் செய்யுந் திறத்தை அவன்
மனைவிக்குக் கூறுவதும் மிக்க சுவையுடையனவாகும்.

 பண்டும் பண்டும் பாடுந ருவப்ப
விண்டோய் சிமைய விறல்வரைக் கவாஅற்
கிழவன் சேட்புலம் படரி னிழையணிந்து
புன்றலை மடப்பிடி பிரிசி லாகப்
5 பெண்டிருந் தம்பதங் கொடுக்கும் வண்புகழ்க்
 கண்டீ ரக்கோ னாகலி னன்றும்
முயங்க லான்றிசின் யானே பொலந்தேர்