| | அரிமயிர்த் திரண்முன்கை வாலிழை மடமங்கையர் வரிமணற் புனைபாவைக்குக் குலவுச்சினைப் பூக்கொய்து | 5. | தண்பொருநைப் புனல்பாயும் | | விண்பொருபுகழ் விறல்வஞ்சிப் பாடல்சான்ற விறல்வேந்தனும்மே வெப்புடைய வரண்கடந்து துப்புறுவர் புறம்பெற்றிசினே | 10. | புறம்பெற்ற வயவேந்தன் | | மறம்பாடிய பாடினியும்மே ஏருடைய விழுக்கழஞ்சிற் சீருடைய விழைபெற்றிசினே இழைபெற்ற பாடினிக்குக் | 15. | குரல்புணர்சீர்க் கொளைவல்பாண் மகனும்மே | | எனவாங்கு ஒள்ளழல் புரிந்த தாமரை வெள்ளி நாராற் பூப்பெற் றிசினே. (11) | திணை: - பாடாண்டிணை. துை ற - பரிசில் கடாநிலை. சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோவைப் பேய்கமள் இளவெயினி பாடியது.
உரை:அரிமயிர்த் திரள் முன் கை-ஐய மயிரையுடைய திரண்ட முன் கையினையும், வாலிழை - தூய ஆபரணத்தையுமுடைய; மட மங்கையர் - பேதை மகளிர்; வரி மணல் புனை பாவைக்கு - வண்டலிழைத்த சிற்றிற்கட் செய்த பாவைக்கு; குலவுச் சினைப் பூக் கொய்து - வளைந்த கோட்டுப்பூவைப் பறித்து; தண் பொருநைப் புனல் பாயும் - குளிர்ந்த ஆன்பொருந்தத்து நீரின்கட் பாய்ந்து விளையாடும்; விண்பொரு புகழ் விறல்வஞ்சி - வானை முட்டிய புகழினையும் வென்றியையுமுடைய கருவூரின் கண்; பாடல் சான்ற விறல் வேந்தனும்மே - பாடுதற்கமைந்த வெற்றியையுடைய அரசனும்; வெப்புடைய அரண் கடந்து - பகை தெறும் வெம்மையையுடைய அரணை யழித்து; துப்புறுவர் புறம் பெற்றிசின் - வலியோடு எதிர்ந்தவருடைய புறக்கொடையைப் பெற்றான்; புறம் பெற்ற வயவேந்தன் மறம் பாடிய பாடினி யும்மே - அப் புறக்கொடையைப் பெற்ற வலிய அரசனது வீரத்தைப் பாடிய பாடினியும்; ஏருடைய விழுக்கழஞ்சின் - தோற்றப் பொலிவுடைய சிறந்த பல கழஞ்சால் செய்யப்பட்ட; சீருடைய இழை பெற்றிசின் - நன்மையையுடைய அணிகலத்தைப் பெற்றாள்; இழை பெற்ற |