பக்கம் எண் :

32

    
  அரிமயிர்த் திரண்முன்கை
வாலிழை மடமங்கையர்
வரிமணற் புனைபாவைக்குக்
குலவுச்சினைப் பூக்கொய்து
5. தண்பொருநைப் புனல்பாயும்
 விண்பொருபுகழ் விறல்வஞ்சிப்
பாடல்சான்ற விறல்வேந்தனும்மே
வெப்புடைய வரண்கடந்து
துப்புறுவர் புறம்பெற்றிசினே
10. புறம்பெற்ற வயவேந்தன்
  மறம்பாடிய பாடினியும்மே
ஏருடைய விழுக்கழஞ்சிற்
சீருடைய விழைபெற்றிசினே
இழைபெற்ற பாடினிக்குக்
15.குரல்புணர்சீர்க் கொளைவல்பாண் மகனும்மே
  எனவாங்கு
ஒள்ளழல் புரிந்த தாமரை
வெள்ளி நாராற் பூப்பெற் றிசினே. (11)

     திணை: - பாடாண்டிணை. துை ற - பரிசில்  கடாநிலை.
சேரமான் பாலை  பாடிய  பெருங்கடுங்கோவைப்  பேய்கமள்
இளவெயினி பாடியது.

     உரை:அரிமயிர்த் திரள் முன் கை-ஐய மயிரையுடைய திரண்ட
முன் கையினையும், வாலிழை - தூய ஆபரணத்தையுமுடைய; மட
மங்கையர்  -  பேதை  மகளிர்; வரி மணல் புனை பாவைக்கு -
வண்டலிழைத்த சிற்றிற்கட் செய்த பாவைக்கு; குலவுச் சினைப் பூக்
கொய்து -  வளைந்த  கோட்டுப்பூவைப் பறித்து; தண் பொருநைப்
புனல்  பாயும் -  குளிர்ந்த  ஆன்பொருந்தத்து நீரின்கட் பாய்ந்து
விளையாடும்;  விண்பொரு  புகழ்  விறல்வஞ்சி - வானை முட்டிய
புகழினையும்  வென்றியையுமுடைய  கருவூரின் கண்; பாடல் சான்ற
விறல் வேந்தனும்மே - பாடுதற்கமைந்த வெற்றியையுடைய அரசனும்;
வெப்புடைய  அரண்  கடந்து -  பகை தெறும் வெம்மையையுடைய
அரணை யழித்து;   துப்புறுவர்   புறம்   பெற்றிசின் - வலியோடு
எதிர்ந்தவருடைய   புறக்கொடையைப்  பெற்றான்;  புறம்  பெற்ற
வயவேந்தன் மறம் பாடிய பாடினி யும்மே - அப் புறக்கொடையைப்
பெற்ற வலிய அரசனது வீரத்தைப் பாடிய பாடினியும்; ஏருடைய
விழுக்கழஞ்சின் - தோற்றப் பொலிவுடைய சிறந்த பல கழஞ்சால்
செய்யப்பட்ட; சீருடைய இழை பெற்றிசின் - நன்மையையுடைய
அணிகலத்தைப் பெற்றாள்; இழை பெற்ற