| பாடினிக்கு - அவ்வணிகலத்தைப் பெற்றாள்; இழை பெற்ற பாடினிக்கு- அவ்வணிகலத்தைப் பெற்ற விறலிக்கு;குரல் புணர் சீர்க் கொளைவல் பாண் மகனும்மே - முதற் றானமாகிய குரலிலே வந்து பொருந்தும் அளவையுடைய பாட்டைவல்ல பாணனும்; ஒள்ளழல் புரிந்த தாமரை - விளங்கிய தழலின்கண்ணே ஆக்கப்பட்ட பொற்றாமரையாகிய; வெள்ளி நாரால் பூப்பெற்றிசின் - வெள்ளி நாரால் தொடுத்த பூவைப் பெற்றான் எ-று.
பாடினி இழை பெற்றாள், பாணன் பூப்பெற்றான், யான் அது பெறுகின்றிலேன் எனப் பரிசில் கடாநிலையாயிற்று. இனி, இவள் பேயாயிருக்க, கட்புலனாயதோர் வடிவுகொண்டு பாடினா ளொருத்தி யெனவும், இக்களத்து வந்தோர் யாவரும் பரிசில் பெற்றார்கள். ஈண்டு நின்னோடு எதிர்ந்து பட்டோரில்லாமையான் எனக்கு உணவாகிய தசை பெற்றிலேன் எனத் தான் பேய்மகளானமை தோன்றப் பரிசில் கடாயினாளெனவும் கூறுவாருமுளர். பாடினிக்குப்......பாண்மகன்என்பது அது வெனுருபுகெடக் குகரம் வந்தது, உயர்திணையாகலின். பாடினி பாடலுக்கேற்பக் கொளைவல் பாண்மகன் எனினு மமையும். எனவும், ஆங்கும்: அசைநிலை. பெற்றிசின் மூன்றும் படர்க்கைக்கண் வந்தன.
விளக்கம்: அரி-ஐம்மை.ஐம்மையாவது மென்மை திரட்சியினைக் கைக்கேற்றுக. மங்கை யென்பது, மங்கைப் பருவத்தராகிய மகளிரைக் குறியாது மகளிர் என்ற பொதுப்பெயராய் நிற்றலால், மட மங்கையர் என்றதற்கு,பேதை மகளிர் என்று பொருள் கூறப்பட்டது.பேதை மகளிர் - விளையாடும் பருவத்து இளமகளிர். வரிமணலிற் புனைந்த பாவையை வண்டற்பாவை யென்றும் கூறுப. வண்டற்பாவை வௌவலின், நுண்பொடி யளைஇக் கடறூர்ப் போளே (ஐங்.124) எனவருவது காண்க. குலவுச்சினை யென்புழிக் குலவுதல் வளைதல்; திருப்புருவ மென்னச் சிலைகுலவி (திருவா. திருவெம்.16) என்புழியும் குலவுதல் இப்பொருளில் வருதல் காண்க. ஆன் பொருந்த மென்னும் யாறு வஞ்சிநகரின் புறமதிலைச் சார்ந்தோடுவது எனச் சான்றோர் (புறம்.387) கூறுவர். அதன் வெண்மணலில் மகளிர் விளையாட்டயர்வது மரபாதலை, குறுந்தொடி மகளிர் பொலஞ் செய் கழங்கிற் றெற்றியாரும், தண்ணான் பொருநை வெண்மணல் (புறம். 36) எனப் பிறரும் கூறுதலாலும் அறியலாம். வேந்தனுமே யென்பது செய்யுளின்பங் குறித்து, வேந்தனும்மே என விகாரமாயிற்று; பாடினியும்மேபாண் மகனும்மே என்பவையும் இது போலவே விகாரம் எனக் கொள்க. வெப்புடைய அரண் என்றவிடத்து வெம்மை வெப்பென நின்றது; அஃதாவது பகை தெறும் வெம்மை யென்பர். உறுவர்,ஈண்டுப் போரிடத்தே எதிருறுபவ ரென்றாகிப் பகைவர்க்காயிற்று துப்பு,வலி.மூவருள் ஒருவன் துப்பாகியரென (புறம்.122) என்றாற் போலதுப்பென் பதற்குப் பகை யென்றே கொண்டு, துப்புறுவர், பகையுற்றவர்எனினும் பொருந்தும்; துப்பி னெவனாவர் (குறள்.1165) என்பதனால்துப்புப் பகை யாதல் காண்க. ஏர்-தோற்றப் பொலிவு. விழுக்கழஞ்சென்புழி கழஞ்சுக்கு விழுப்பம் சிறப்பாலும் பன்மையாலும்உண்டாதலின், விழுக்கழஞ்சு என்றதற்குச் சிறந்த பலகழஞ்சுஎன உரைகூறினார். இழைகளாவன
|