பக்கம் எண் :

324

 
 மழையணி குன்றத்துக் கிழவ னாளும்
இழையணி யானை யிரப்போர்க் கீயும்
சுடர்விடு பசும்பூட் சூர்ப்பமை முன்கை
அடுபோ ரானா வாத னோரி
5மாரி வண்கொடை காணிய நன்றும்
 சென்றது மன்னெங் கண்ணுளங் கடும்பே
பனிநீர்ப் பூவா மணிமிடை குவளை
வானார்த் தொடுத்த கண்ணியுங் கலனும்
யானை யினத்தொடு பெற்றனர் நீங்கிப்
10பசியா ராகன் மாறுகொல் விசிபிணிக்
 கூடுகொ ளின்னியங் கறங்க
ஆடலு மொல்லார்தம் பாடலு மறந்தே.  
(153)

     திணை: அது. துறை: இயன்மொழி. அவனை அவர் பாடியது.

    உரை: மழை யணி குன்றத்துக் கிழவன் - முகில் சூழ்ந்த
மலைக்குத் தலைவன்; நாளும் இழையணி யானை இரப்போரக்கு ஈயும்
- நாடோறும் பட்டமுதலாகிய பூண்களை யணிந்த யானையை
இரப்போர்க்குக் கொடுக்கும்; சுடர் விடு பசும் பூண் சூர்ப்பு அமை
முன் கை - கதிர் விடுகின்ற பசும்பொன்னாற் செய்த அணியினையும்
வளைந்த கடகமமைந்த முன் கையினையுமுடைய; அடுபோர் ஆனா
ஆதன் ஓரி - கொல்லும் போர் அமையாத ஆதனோரியது; மாரி வண்
கொடை காணிய - மழைபோலும் வள்ளிய கொடையைக் காண்டற்கு;
நன்றும் சென்றது எம் கண்ணுளங் கடும்பு - மிகவும் சென்றது
எம்முடைய கூத்தச் சுற்றம்; பனி நீர்ப் பூவா மணிமிடை குவளை -
குளிர்ந்த நீரின்கட் பூவாத மணிமிடைந்த குவளைப் பூவை; வால்
நார்த் தொடுத்த கண்ணியும் - வெள்ளிய நாரால் தொடுக்கப்பட்ட
பொன்னரி மாலையினையும்; கலனும் - பிற அணிகலங்களையும்;
யானை இனத்தொடு பெற்றனர் நீங்கி - யானை யணிகளுடனே
பெற்றனராய் நீங்கி; பசியா ராகல் மாறுகொல் - பசியாராகலானே
கொல்லோதான்; விசி பிணிக் கூடுகொள் இன்னியம் கறங்க - வாரால்
வலித்துப் பிணிக்கப்பட்ட பல கருவியும் தொகுதி கொண்ட இனிய
இயங்கள் ஒலிப்ப; ஆடலும் ஒல்லார் தம் பாடலும் மறந்து -
அச்சுற்றத்தார் ஆடுதலு மாட்டாராயினார் தமது பாடுதலையும் மறந்து
எ-று.

         சூர்ப்புடையதனைச் சூர்ப்பென்றார். “குடிமை ஆண்மைத்”
(தொல். சொல். கிளவி.57) தொடக்கத்தன நின் றாங்கே நின்று உயர்திணை
முடியும் பெறுதலின், இக் கடும்பென்பதும் பொருணோக்கால் முடிபு பெற்றது.