பக்கம் எண் :

334

 

நெடுநாள்பிரிந்திருக்கும் பிரிவுத்துயர் மற்றொருபுறம் வருத்த வருந்தி நிற்கும்
தன் மனைக்கிழத்தியாரை யடைந்து தாம் பெற்ற பெருஞ் செல்வத்தைப்
பெறார்க்கும் பிறர்க்கும் வழங்கித் தாமும் உண்டு இனிதிருந்தார்.

     இப் பாட்டின்கண் பெருஞ்சித்திரனார் குமணன் தந்த
பெருவளத்தைப் பெறுங்கால், அவனை இனிய தமிழால் வாழ்த்துகின்றார்.
இதன்கண் பாரி, ஓரி, காரி, எழினி, பேகன், ஆய், நள்ளி யென்ற
வள்ளல்கள் எழுவரையும் எடுத்தோதி, “இவ் வெழுவர்க்குப் பின்னே
இரவலர் இன்மை தீர்த்தற்கு யான் உள்ளேன் என்று மேம்பட்டிருக்கும்
நின்னை யடைந்தேன்; முதிரமலைத் தலைவ, குமண, என்னை ஏற்றுப்
பேணிச் சிறப்பித்த நீ வண்மையாலும், வேற்படை நல்கும் வென்றியாலும்
மேம்படுவாயாக”என வாழ்த்துகின்றார்.

 முரசுகடிப் பிகுப்பவும் வால்வளை துவைப்பவும்
அரசுடன் பொருத வண்ண னெடுவரைக்
கறங்குவெள் ளருவி கல்லலைத் தொழுகும்
பறம்பிற் கோமான் பாரியும் பிறங்குமிசைக்
5கொல்லி யாண்ட வல்வி லோரியும்
 காரி யூர்ந்து பேரமர்க் கடந்த
மாரி யீகை மறப்போர் மலையனும்
ஊரா தேந்திய குதிரைக் கூர்வேற்
கூவிளங் கண்ணிக் கொடும்பூ ணெழினியும்
10 ஈர்ந்தண் சிலம்பி னிருடூங்கு நளிமுழை
 அருந்திறற் கடவுள் காக்கு முயர்சிமைப்
பெருங்க னாடன் பேகனுந் திருந்துமொழி
மோசி பாடிய வாயு மார்வமுற்
றுள்ளி வருந ருலைவுநனி தீரந்
15தள்ளா தீயுந் தகைசால் வண்மைக்
 கொள்ளா ரோட்டிய நள்ளியு மெனவாங்
கெழுவர் மாய்ந்த பின்றை யழிவரப்
பாடி வருநரும் பிறருங் கூடி
இரந்தோ ரற்றந் தீர்க்கென விரைந்திவண்
20உள்ளி வந்தனென் யானே விசும்புறக்
 கழைவளர் சிலம்பின் வழையொடு நீடி
ஆசினிக் கவினிய பலவி னார்வுற்று
முட்புற முதுகனி பெற்ற கடுவன்
துய்த்தலை மந்தியைக் கையிடூஉப் பயிரும்
25அதிரா யாணர் முதிரத்துக் கிழவ