பக்கம் எண் :

335

 
 இவண்விளங்கு சிறப்பி னியறேர்க் குமண
இசைமேந் தோன்றிய வண்மையொடு
பகைமேம் படுகநீ யேந்திய வேலே.    
(158)

     திணை: அது. துறை: வாழ்த்தியல்; பரிசில் கடாநிலையுமாம்.
குமணனைப் பெருஞ்சித்திரனார் பாடியது.

     உரை: முரசு கடிப்பு இகுப்பவும் - முரசு கடிப்பு அறையவும்;
வால் வளை துவைப்பவும் - வெள்ளிய சங்கு முழங்கவும்; அரசுடன்
பொருத அண்ணல் - வேந்தருடனே பொருத தலைமையையுடைய;
நெடுவரை கறங்கு வெள் ளருவி கல் அலைத்தொழுகும் - நெடிய
மலைக்கண் ஒலிக்கும் வெளிய அருவி கல்லை யுருட்டி யோடும்;
பறம்பின் கோமான் பாரியும் - பறம்பிற்கு வேந்தனாகிய பாரியும்;
பிறங்கு  மிசைக்  கொல்லி ஆண்ட வல்வில்  ஓரியும் - உயர்ந்த
உச்சியையுடைய கொல்லிமலையை ஆண்ட வலிய வில்லையுடைய
ஓரியும்; காரி ஊர்ந்து பேரமர்  கடந்த - காரி  யென்னும்
பெயரையுடைய குதிரையைச்  செலுத்திப் பெரிய பூசலை வென்ற;
மாரி ஈகை - மாரிபோலும் வண்மையையும்; மறப் போர் மலையனும்
- மிக்க  போரினையுமுடைய  மலையனும்; ஊராது ஏந்திய குதிரைக்
கூர் வேல் - செலுத்தப்படாது உயர்ந்த குதிரை யென்னும்
மலையையும் கூரிய  வேலையும்;  கூவிளங்   கண்ணி - கூவிளங்
கண்ணியையும்; கொடும் புண்  எழினியும் - வளைந்த
ஆரத்தையுமுடைய  எழினி அதியமானும்; ஈர்ந்தண் சிலம்பின் இருள்
தூங்கு நளி முழை - மிகக் குளிர்ந்த மலையின்கண் இருள் செறிந்த
முழையினையும்; அருந் திறல்கடவுள்  காக்கும் - மலைத்தற்கரிய
வலியினையுமுடைய தெய்வம் காக்கும்; உயர் சிமைப் பெருங் கல்
நாடன் பேகனும் - உயர்ந்த சிகரங்களையுடைய பெரிய
மலைநாடனாகிய பேகனும்; திருந்து மொழி மோசி பாடிய ஆயும் -
திருந்திய சொல்லையுடைய மோசி யென்னும் புலவனாற் பாடப்பட்ட
ஆயும்; ஆர்வ முற்று உள்ளி வருநர் உலைவு நனி தீர -
ஆசைப்பட்டுத் தன்னை நினைந்து வருவாருடைய வறுமை மிகவும்  
நீங்க;  தள்ளாது  ஈயும்  தகை  சால் வண்மை - தவிராது
கொடுக்கும் கூறுபாடமைந்த வண்மையினையுடைய; கொள்ளார்
ஓட்டியநள்ளியும்   என - பகைவரைத்  துரத்திய   நள்ளியும்
எனச் சொல்லப்பட்ட; எழுவர் மாய்ந்த பின்றை - எழுவரும் இறந்த
பின்பு; அளி வரப் பாடி வருநரும் பிறரும் கூடி - கண்டார்க்கு
இரக்கம் வரப் பாடி வருவாரும் பிறரும் கூடி; இரந்தோர் அற்றம்
தீர்க்கு என - இரந்தோரது துன்பத்தைத் தீர்க்கக் கடவேன் யான்
என்று நீ இருத்தலால்; விரைந்து உள்ளி வந்தனென் யான் -
விரைந்து இவ்விடத்தே பரிசில் பெற நினைந்து வந்தேன் யான்;