பக்கம் எண் :

337

 

“உள்ளிவருநர் உலைவுநனி தீரத், தள்ளா தீயும் தகைசால் வண்மை”
யையுடைய  நள்ளி யென்றார். ஆர்வம்,  கடைக்குறைந்து, “ஆர்வு”என
வந்தது.  மலையன்   காரியூர்ந்து   ஓரியொடு  செய்த   போரைப்
“பேரமர்”என்றார்;  அவன் ஓரியைக் கொன்று அவனது கொல்லி
மலையைச் சேரலர்க் கீந்த   போர்   அதுவாகும்; அதனை, “முள்ளூர்
மன்னன்  கழல்தொடிக் காரி, செல்லாநல்லிசை நிறுத்த வல்வில், ஓரிக்
கொன்று சேரலர்க் கீத்த, செவ்வேர்ப் பலவின்  பயங்கெழு  
கொல்லி”(அகம்.209)   எனச்   சான்றோர்  கூறுப. வழையொடு நீடி
யென்றாற்  போல,  ஆசினியொடு   கவினிய   என
எடுத்தோதாமையின், “ஒடுவிரித்  துரைக்கப்பட்ட”   தென்றார்.
“என்றும் எனவும்   ஒடுவுந் தோன்றி,  ஒன்று  வழியுடைய வெண்ணினுட்
பிரிந்தே”(தொல்.சொல்.இடை,46) என்பது ஒடுவை விரித்தற்கு இலக்கணம்.

                        159. குமணன்

     பெருஞ்சித்திரனார், இப் பாட்டின்கண், வறுமைத் துயரால் தன்னைப்
பெற்ற முதிய தாயும், இனிய மனைவியும், பலராகிய மக்களும் உடல்
தளர்ந்து மேனி வாடிக் கிடப்பதும் அவர் நெஞ்சு மகிழுமாறு தான்
பொருள் பெற்றுச் செல்லவேண்டி யிருப்பதும் எடுத்தோதி, “யான் களிறு
முதலிய பரிசில் பெறுவேனாயினும் முகமாறித் தரும் பரிசிலைப் பெற
விரும்பேன்; நீ உவந்து யான் இன்புற விடை தருவையேல் குன்றிமணி
யளவிற்றாயினும் நீ தரும் பரிசிலை விரும்பி யேற்றுக் கொள்வேன்; எனக்கு
அவ் வின்பமுண்டாகும் வகையில் என்னை யருள வேண்டுகின்றேன்”என்று
கூறுகின்றார்.

 வாழு நாளோ டியாண்டுபல வுண்மையின்
தீர்தல்செல் லாதென் னுயிரெனப் பலபுலந்து
கோல்கா லாகக் குறும்பல வொதுங்கி
நூல்விரித் தன்ன கதுப்பினள் கண்டுயின்று
5முன்றிற் போகா முதிர்வினள் யாயும்
 பசந்த மேனியொடு படரட வருந்தி
மருங்கிற் கொண்ட பல்குறு மாக்கள்
பிசைந்துதின வாடிய முலையள் பெரிதழிந்து
குப்பைக் கீரை கொய்கண் ணகைத்த
10முற்றா விளந்தளிர் கொய்துகொண் டுப்பின்று
 நீருலை யாக வேற்றி மோரின்
றவிழ்ப்பத மறந்து பாசடகு மிசைந்து
மாசொடு குறைந்த வுடுக்கைய ளறம்பழியாத்
துவ்வா ளாகிய வென்வெய் யோளும்
15என்றாங், கிருவர் நெஞ்சமு முவப்பக் கானவர்