பக்கம் எண் :

338

 
 கரிபுன மயக்கிய வகன்கட் கொல்லை
ஐவனம் வித்தி மையுறக் கவினி
ஈனம் செல்லா வேனற் கிழுமெனக்
கருவி வானந் தலைஇ யாங்கும்
20ஈத்த நின்புக ழேத்தித் தொக்கவென்
 பசிதினத் திரங்கிய வொக்கலு முவப்ப
உயர்ந்தேந்து மருப்பிற் கொல்களிறு பெறினும்
தவிர்ந்துவிடு பரிசில் கொள்ளலெ னுவந்துநீ
இன்புற விடுதி யாயிற் சிறிது
25குன்றியுங் கொள்வல் கூர்வேற் குமண
 அதற்பட வருளல் வேண்டுவல் விறற்புகழ்
வசையில் விழுத்திணைப் பிறந்த
இசைமேந் தோன்றனிற் பாடிய யானே.   (159)

     திணை: அது. துறை: பரிசில் கடாநிலை. அவனை அவர்
பாடியது.

     உரை: யாண்டு பல உண்மையின் - தனக்குச் சென்ற
ஆண்டுகள் பலவுண்டாதலின்; தீர்தல் செல்லாது என் உயிர் என -
இன்னும் போகின்றதில்லை எனதுயிர் என்று சொல்லிக் கொண்டு;
வாழு நாளோடு பல புலந்து - வாழும் நாளோடு பலவாக வெறுத்து;
கோல் காலாகக் குறும் பல ஒதுங்கி - தான் பிடித்த தண்டே
காலாகக் கொண்டு ஒன்றற்கொன்று அணுகப் பல அடியிட்டு நடந்து;
நூல் விரித் தன்ன கதுப்பினள் - நூலை விரித்தாற்போலும் மயிரை
யுரையவளாய்; கண் துயின்று முன்றிற் போகா முதிர்வினள் யாயும் -
கண் மறைந்து முற்றத் திடத்துப் புறப்பட மாட்டாத மூப்பை யுடைய
தாயும்; பசந்த மேனியொடு - பசப்புற்ற மேனியுடனே; படர் அட
வருந்தி - நினைவு வருத்த வருந்தி; மருங்கில் கொண்ட பல் குறு
மாக்கள் - மருங்கிலே யெடுத்த பல சிறு பிள்ளைகள்; பிசைந்து
தினவாடிய முலையள் - பிசைந்து மெல்லுதலால் உலர்ந்த முலையினை
யுடையளாய்; பெரிது அழிந்து - மிகவும் வருந்தி; குப்பைக் கீரை
கொய்கண் அகைத்த  முற்றா இளந் தளிர் கொய்து  கொண்டு -
குப்பையின்கண்  படு   முதலாக  வெழுந்த   கீரையினது   முன்பு
கொய்யப்பட்ட  கண்ணிலே கிளைத்த முதிராத இளைய  தளிரைப்
பறித்துக்கொண்டு; உப்பின்று நீர் உலையாக ஏற்றி - உப்பின்றியே
நீரை உலையாகக்கொண்டு ஏற்றிக் காய்ச்சி; மோர் இன்று - மோர்
இன்றி; அவிழ்ப் பதம் மறந்து - அவிழாகிய உணவை மறந்து; பாசடகு
மிசைந்து - பசிய இலையைத் தின்று; மாசொடு குறைந்த உடுக்கையள்
- மாசோடு கூடித் துணிபட்ட உடையினளாய்;