| கரிபுன மயக்கிய வகன்கட் கொல்லை ஐவனம் வித்தி மையுறக் கவினி ஈனம் செல்லா வேனற் கிழுமெனக் கருவி வானந் தலைஇ யாங்கும் | 20 | ஈத்த நின்புக ழேத்தித் தொக்கவென் | | பசிதினத் திரங்கிய வொக்கலு முவப்ப உயர்ந்தேந்து மருப்பிற் கொல்களிறு பெறினும் தவிர்ந்துவிடு பரிசில் கொள்ளலெ னுவந்துநீ இன்புற விடுதி யாயிற் சிறிது | 25 | குன்றியுங் கொள்வல் கூர்வேற் குமண | | அதற்பட வருளல் வேண்டுவல் விறற்புகழ் வசையில் விழுத்திணைப் பிறந்த இசைமேந் தோன்றனிற் பாடிய யானே. (159) |
திணை: அது. துறை: பரிசில் கடாநிலை. அவனை அவர் பாடியது.
உரை: யாண்டு பல உண்மையின் - தனக்குச் சென்ற ஆண்டுகள் பலவுண்டாதலின்; தீர்தல் செல்லாது என் உயிர் என - இன்னும் போகின்றதில்லை எனதுயிர் என்று சொல்லிக் கொண்டு; வாழு நாளோடு பல புலந்து - வாழும் நாளோடு பலவாக வெறுத்து; கோல் காலாகக் குறும் பல ஒதுங்கி - தான் பிடித்த தண்டே காலாகக் கொண்டு ஒன்றற்கொன்று அணுகப் பல அடியிட்டு நடந்து; நூல் விரித் தன்ன கதுப்பினள் - நூலை விரித்தாற்போலும் மயிரை யுரையவளாய்; கண் துயின்று முன்றிற் போகா முதிர்வினள் யாயும் - கண் மறைந்து முற்றத் திடத்துப் புறப்பட மாட்டாத மூப்பை யுடைய தாயும்; பசந்த மேனியொடு - பசப்புற்ற மேனியுடனே; படர் அட வருந்தி - நினைவு வருத்த வருந்தி; மருங்கில் கொண்ட பல் குறு மாக்கள் - மருங்கிலே யெடுத்த பல சிறு பிள்ளைகள்; பிசைந்து தினவாடிய முலையள் - பிசைந்து மெல்லுதலால் உலர்ந்த முலையினை யுடையளாய்; பெரிது அழிந்து - மிகவும் வருந்தி; குப்பைக் கீரை கொய்கண் அகைத்த முற்றா இளந் தளிர் கொய்து கொண்டு - குப்பையின்கண் படு முதலாக வெழுந்த கீரையினது முன்பு கொய்யப்பட்ட கண்ணிலே கிளைத்த முதிராத இளைய தளிரைப் பறித்துக்கொண்டு; உப்பின்று நீர் உலையாக ஏற்றி - உப்பின்றியே நீரை உலையாகக்கொண்டு ஏற்றிக் காய்ச்சி; மோர் இன்று - மோர் இன்றி; அவிழ்ப் பதம் மறந்து - அவிழாகிய உணவை மறந்து; பாசடகு மிசைந்து - பசிய இலையைத் தின்று; மாசொடு குறைந்த உடுக்கையள் - மாசோடு கூடித் துணிபட்ட உடையினளாய்; |