பக்கம் எண் :

339

 

அறம் பழியா - அறக் கடவுளைப் பழித்து; துவ்வாளாகிய என்
வெய்யோளும் - உண்ணாளாகிய என்னை விரும்பியோளும்; என்ற -
என்று சொல்லப்பட்ட; இருவர் நெஞ்சமும் உவப்ப - இருவருடைய
நெஞ்சமும் காதலிப்ப; கானவர் கரி புனம் மயக்கிய அகன்கண்
கொல்லை - வேடர் சுடப்பட்டுக் கரிந்த புனத்தை மயங்க உழுத
அகன்ற இடத்தையுடைய கொல்லைக்கண்; ஐவனம் வித்தி - ஐவன
நெல்லோடு வித்தி; மையுறக் கவினி - இருட்சியுற அழகு பெற்று;
ஈனல் செல்லா ஏனற்கு - கோடை மிகுதியான் ஈன்றலைப்
பொருந்தாத தினைக்கு; இழு மெனக் கருவி வானம் தலைஇ யாங்கும்
- இழு மென்னும் அனுகரண வொலியுடனே மின்னும் இடியு முதலாகிய
தொகுதியை யுடைய மழைத் துளியைச் சொரிந்தாற் போல; ஈத்த
நின் புகழ் ஏத்தி - தந்த நினது புகழை வாழ்த்தி; பசி தினத்
திரங்கிய தொக்க என் ஒக்கலும் உவப்ப - பசி தினலால் வருத்தமுற்ற
ஈண்டிய எனது சுற்றமும் மகிழ; உயர்ந்து ஏந்து மருப்பின் கொல்
களிறு பெறினும் - மேம்பட்டு ஏந்திய கோட்டையுடைய கொல்
யானையைப் பெறினும்; தவிர்ந்து விடு பரிசில் கொள்ளலென் -
முகமாறித் தரும் பரிசிலைக் கொள்ளேன்; உவந்து நீ இன்புற விடுதி
யாயின் - மகிழ்ந்து நீ யான் இன்புற விரையத் தந்து விடுவையாயின்;
சிறிது குன்றியும் கொள்வல் - சிறிதாகிய குன்றி யென்னும்
அளவையுடைய பொருளாயினும் கொள்வேன்; கூர் வேல் குமண -
கூரிய வேலையுடைய குமணனே; அதற்பட அருளல் வேண்டுவல் -
அவ்வின்புறுதற்கண்ணே பட அருளுதலை வேண்டுவேன்; விறல் புகழ்
வசையில் விழுத்திணை பிறந்த - வென்றிப் புகழையுடைய
வசையில்லாத சிறந்த குடியின் கட்பிறந்த; இசைமேந் தோன்றல் -
இசை மேம்பட்ட அண்ணலே; நிற் பாடிய யான் - நின்னைப் பாடிய
யான் எ-று.

     குமண, இசை மேந் தோன்றல், நிற்பாடிய யான், கொல் களிறு
பெறினும் தவிர்ந்து விடு பரிசில் கொள்ளலென்; இருவர் நெஞ்சமுமு்
உவப்ப, ஒக்கலும் உவப்ப, உவந்து இன்புற விடுதியாயின் குன்றியுங்
கொள்வேன்; அதற்பட அருளல் வேண்டுவல் எனக் கூட்டி வினை முடிவு
செய்க.

     “வாழு நாளோடு யாண்பல வுண்மையின்”என்பதற்கு இன்ப நுகர்ந்து
கழிந்து இளமை நாளுடனே மூப்பு வந்து துன்புற்ற யாண்டு பல வுண்மையின்
எனினு மமையும். குன்றியு மென்பதற்குக் குறைந்து மென்றுரைப்பாரு முளர்.
ஆங்கும் என்னும் உம்மை இசைநிலை.

     விளக்கம்: உரைகாரர், படுமுதல் என்றது, பிறர் விதைக்க
முளையாது தானே காற்றாலும் நீராலும் பிற வுயிர்களாலும் விதை சிதறப்
பட்டுத் தானே முளைத்தது என்றவாறு. முகமாறித் தரும் பரிசில் -
வருந்தியும் வருத்தியும் நல்கப் பெறும் பரிசில். பரிசிலின்
இன்றியாமையாமையும், அதனைப் பெறுதற்கண் தாம் கொண்ட கருத்தும்
என