பக்கம் எண் :

351

 
 நீரொடு நிறைந்த வீரிதழ் மழைக்கணென்
மனையோ ளெவ்வ நோக்கி நினைஇ
நிற்படர்ந் திசினே நற்போர்க் குமண
என்னிலை யறிந்தனை யாயி னிந்நிலைத்
10தொடுத்துங் கொள்ளா தமையலெ னடுக்கிய
 பண்ணமை நரம்பின் பச்சை நல்யாழ்
மண்ணமை முழவின் வயிரியர்
இன்மை தீர்க்குங் குடிப்பிறந் தோயே.
  (164)

     திணை: அது. துறை: பரிசில் கடாநிலை. தம்பியால் நாடு
கொள்ளப்பட்டுக் காடுபற்றியிருந்த குமணனைப் பெருந்தலைச்
சாத்தனார் பாடியது.

     உரை: ஆடு நனி மறந்த கோடு உயர் அடுப்பின் - அடு தலை
மிகவும் மறந்த புடை யோங்கிய அடுப்பின்கண்; ஆம்பி பூப்ப -
களாம்பி பூப்ப; தேம்பு பசி உழவா - உடம்பு மெலியும் பசியான்
வருந்தி; பாஅல் இன்மையின் தோலொடு திரங்கி - பாலின்மையால்
தோலாந்தன்மையுடனே திரங்கி; இல்லி தூர்ந்த பொல்லா வறு முலை
- துளை தூர்ந்த பொல்லாத வறிய முலையை; சுவைத்தொறு அழூஉம்
தன் மகத்துமுக நோக்கி - வறிதே சுவைக்குந்தோறும் அழுகின்ற
தனது பிள்ளையது முகத்தைப் பார்த்து; நீரொடு நிறைந்த ஈர் இதழ்
மழைக்கண் - நீரால் நிரம்பிய ஈரிய இமையையுடைய குளிர்ந்த
கண்ணையுடைய; என் மனையோள் எவ்வம் நோக்கி - என்
மனைவியது வருத்தத்தைப் பார்த்து; நினைஇ நிற்படர்ந்திசின் -
இந்த வருத்தம் தீர்த்தற்குரியாய் நீ யென நினைந்து நின்பால்
வந்தேன்; நற்போர்க் குமண - நல்ல போரையுடைய குமண; என்
நிலை அறிந்தனை யாயின் - எனது வறுமை நிலையை நீ
யறிந்தாயாயின்; இந் நிலை - இவ்வாறு வறுமையுற்று நின்ற
நிலைமைக்கண்; தொடுத்துங் கொள்ளா தமையலென் -
வளைத்தாயினும்பரிசில் கொள்ளாது விடேன்; அடுக்கிய பண்ணமை
நரம்பின் பச்சை நல்யாழ் - பலவாக அடுக்கப்பட்ட
பண்ணுதலமைந்த நரம்பினையுடைய தோலாற் போர்க்கப்பட்ட நல்ல
யாழையும்; மண்ணமை  முழவின் - மார்ச்சனை  நினைந்த
மத்தளத்தினையுமுடைய; வயிரியர் இன்மை தீர்க்கும் குடிப்
பிறந்தோய் - கூத்தரது மிடியைக் கெடுக்கும் குடியின்கட்
பிறந்தோயாதலால் எ-று.

     அடுதலை மிகவும் மறத்தலால் தேய்வின்றி உயர்ந்த அடுப்பென்றாராம்.
குமண, நீ இன்மை தீர்க்கும் குடிப்பிறந்தோ யாதலால், இந்நிலை
தொடுத்தும் கொள்ளாது அமையலென் எனக் கூட்டுக.