பக்கம் எண் :

36

    

யுடையவன்; இவன் களிறு மதம்பட்டதனால் இவன் நோயின்றிச்
செல்வானாதல் வேண்டும் என்று குறிக்கின்றார்.

 இவனியா ரென்குவை யாயி னிவனே
புலிநிறக் கவசம் பூம்பொறி சிதைய
எய்கணை கிழித்த பகட்டெழின் மார்பின்
மறலி யன்ன களிற்றுமிசை யோனே
5.களிறே, முந்நீர் வழங்கும் நாவாய் போலவும்
  பன்மீ னாப்பட் டிங்கள் போலவும்
சுறவினத் தன்ன வாளோர் மொய்ப்ப
மரீஇயோ ரறியாது மைந்துபட் டன்றே
நோயில னாகிப் பெயர்கதி லம்ம
10.பழன மஞ்ஞை யுகுத்த பீலி
  கழனி யுழவர் சூட்டொடு தொகுக்கும்
கொழுமீன் விளைந்த கள்ளின்
விழுநீர் வேலி நாடுகிழ வோனே (13)

     திணை: பாடாண்டிணை. துறை:  வாழ்த்தியல்.   சோழன்
முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி  கருவூரிடஞ்  செல்வானைக்
கண்டு சேரமான்    அந்துவஞ்சேர     லிரும்பொறையொடு
வேண்மாடத்து    மேலிருந்து    உறையூர்    ஏணிச்சேரி
முடமோசியார் பாடியது.

     உரை: இவன்  யார் என்குவையாயின் - இவன் யாரென்று
வினவுவாயாயின்;  இவனே  -  இவன்தான்;  புலிநிறக்  கவசம்
- புலியினது தோலாற்  செய்யப்பட்ட  மெய்புகு  கருவி  பொலிந்த;
பூம்பொறி  சிதைய -  கொளுத்தற;  எய் கணை கிழித்த - எய்த
அம்புகள்  போழப்பட்ட; பகட்டெழில்  மார்பின் - பரந்துயர்ந்த
மார்பினையுடைய; மறலி யன்ன களிற்று மிசை யோன் - கூற்றம்
போன்ற களிற்றின் மேலோன்; களிறு - இக்களிறு தான்; முந்நீர்
வழங்கும்  நாவாய்  போலவும்  -  கடலின்  கண்ணேயியங்கும்
மரக்கலத்தை யொப்பவும்; பன்மீன் நாப்பண் திங்கள் போலவும்
- பல மீனினது நடுவே செல்லும் மதியத்தை யொப்பவும்; சுறவினத்
தன்ன  வாளோர்  யொப்ப - சுறவின் இனத்தை யொத்த வாண்
மறவர் சூழ; மரீஇயோர் அறியாது - தன்னை  மருவிய  பாகரை
யறியாது;   மைந்து  பட்டன்று -  மதம்பட்டது;  நோயிலனாகிப்
பெயர்கதில் அம்ம - இவன் நோயின்றிப் பெயர்வானாக; பழனம்
-வயலிடத்து; மயில் உகுத்த பீலி - மயில் உதிர்த்த பீலியை;கழனி
யுழவர் -  ஆண்டுள்ள  உழவர்;  சூட்டொடு தொகுக்கும் -நெற்
சூட்டுடனே திரட்டும்; கொழுமீன் - கொழுவிய மீனையும்;
விளைந்த கள்ளின் -