| நும்படை செல்லுங் காலை யவர்படை எடுத்தெறி தானை முன்னரை யெனாஅ அவர்படை வரூஉங் காலை நும்படைக் கூழை தாங்கிய வகல்யாற்றுக் | 5 | குன்றுவிலங்கு சிறையி னின்றனை யெனாஅ | | அரிதாற் பெருமநின் செவ்வி யென்றும் பெரிதா லத்தையென் கடும்பின் திடும்பை இன்னே விடுமதி பரிசில் வென்வேல் இளம்பல் கோசர் விளங்குபடை கன்மார் | 10 | இகலின் ரெறிந்த வகலிலை முருக்கின் | | பெருமரக் கம்பம் போலப் பொருநர்க் குலையாநின் வலன்வா ழியவே.(169) |
திணை: அது. துறை: பரிசில் கடாநிலை. அவனைக் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது.
உரை: நும் படை செல்லுங் காலை - நும்முடைய படை பகைவர்மேற் போங்காலத்து; அவர் படை எடுத் தெறி தானை முன்னரை எனாஅ - அவரது படையாகிய வேல் முதலாயவற்றை ஓங்கி யெறிவும் படைக்கு முன்னே நிற்பை யாகலானும்; அவர் படை வரூஉங் காலை - அவர் படை அடர்த்து வருங் காலத்து; நும் படைக் கூழை தாங்கிய - நும் படையினது அணியைத் தாங்க வேண்டிய; அகல் யாற்றுக் குன்று விலங்கு சிறையின் நின்றனை எனாஅ - அகன்ற ஆற்றின்கண் குறுக்கே தடுத்துக் கிடக்கின்ற மலையையொப்ப அதனைத் தடுத்து நின்றாயாதலானும்; பெரும - பெருமானே; நின் செவ்வி அரிது என்றும் - நின்னைக் காணலாங் காலம் பெறுதலரிது எந்நாளும்; என் கடும்பினது இடும்பை பெரிது - எனது சுற்றத்தினது இடும்பை பெரிதாதலால்; இன்னே பரிசில் விடுமதி - நீ இப்பொழுதே எனக்குப் பரிசில் தந்து விடுவாயாக; வென் வேல் இளம் பல் கோசர் - வென்றி வேலையுடைய இளைய பல கோசர்; விளங்கு படை கன்மார் - விளங்கிய படைக்கலங் கற்பார்; இகலினர் எறிந்த மாறுபட்டனராய் எறிந்த; அகல் இலை முருக்கின் பெரு மரக் கம்பம் போல - அகன்ற இலையையுடைய முருக்காகிய பெரிய மரத்தாற் செய்யப்பட்ட தூணமாகிய இலக்கைப் போல; பொருநர்க்குலையா நின் வலன் வாழிய - பொருவார்க்குத் தொலையாத நினது வென்றி வாழ்வதாக எ-று.
எனா என்பன எண்ணிடைச்சொல். எளிதாலத்தை யென்று பாட மோதுவாரு முளர்.
|