பக்கம் எண் :

365

 

    விளக்கம்: முன்னர் என்பது முன்னிலைக்குறிப்பு வினையாய்
முன்னரையென வந்தது; முன்னே நிற்பா யென்பது பொருள். பின்னே
அணிவகுத்து வரும் படை கூழைப்படை. அகல் யாற்றுக் குன்று விலங்கு
சிறை, அகல் யாற்றுக் குன்று சிறை, விலங்கு சிறை யென இயையும்; குன்று
சிறை, குன்றாகிய சிறை, குறுக்கே தடுத்துக் கிடக்கும் சிறை யென வரும்.
“வருவிசைப் புனலைக் கற்சிறை போல, ஒருவன் தாங்கிய பெருமை”
(தொல். புறத்.8) என்பது காண்க. சிறை, அணை. ஒன்று மேற்சேறல், ஒன்று
வருபடை தாங்கல் என்ற இரண்டினும் நீ இருபடைக்கும் இடையே
நிற்றலின், “என்றும் நின் செவ்வி எமக்கு அரிதாயிற்”றென்றார். நின்
செவ்வி பெறுவதோ அரிது; என் கடும்பின் இடும்பையோ பெரிது என்றது,
விரையப் பரிசில் தரவேண்டுமென்பதை வற்புறுத்துகிறது. கோசர், ஒருவகை
வீரர்; இவரைப்  பற்றிப்  பல  குறிப்புக்கள்  சங்கத்தொகை  நூல்களில்
காணப்படுக்கின்றன; இவர் சொன்னலமுடையர். அத்தை, ஆல் என்பன
அசைநிலை.

                      170. பிட்டங்கொற்றன்

     சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவனைப் பாடி
அவன் தந்த சிறப்புக்களைப் பெற்று இனிதிருந்த உறையூர் மருத்துவன்
தாமோதரனார், சேரமான்   கோதையின் படைத்துணைவனான   பிட்டங்
கொற்றனுடைய வண்மையும் போர் வன்மையும் கேள்வியுற்று அவன்பால்
பெருமதிப்புடையரானார். குதிரைமலையைச் சார்ந்த அவனது நாட்டிற்குச்
சென்று அவனைக் கண்டு  இன்புற்றார். அவனும் அவரை வரவேற்றுத்
தன்பால் சின்னாள் இருக்கச் செய்தான். அக்காலை, கொற்றனொடு பொரக்
கருதிய பகைவர் போர் தொடுத்தற்குச் சமைந்திருந்தனர். அதனை ஒற்றரால்
அறிந்தபோது,  அவையிடத்திருந்த தாமோதரனார்  அப் பகைவரது ஒற்றர்
அறியுமாறு  இப்பாட்டால்  கொற்றனது வல்லாண்மையை விதந்தோதினார்.
இதன்கண், “பகைவர்களே, மலை  நாடனாகிய  கொற்றனைக் குறுகற்கு
நினையாதீர்கள். அவன் விறலியர்க்கு முத்தை ஈந்து, தேறலால் பாண் கடும்
பருத்தித்  தன்னை  நயத்தவர்க்கு  மென்மைத்  தன்மையும்  நயவார்க்கு
வன்மைத்தன்மையு முடையனாய் விளங்குகின்றான். பகைவர்க்குக் கொல்லன்
கூடத்தா லெறியும் உலைக்கல் போலும் வல்லாண்மை யுடையன்; அதனால்
நீவிர் குறுகின் கெட்டழிவது திண்ணம்”என்று கூறியுள்ளார்.

 மரைபிரித் துண்ட நெல்லி வேலிப்
பரலுடை முன்றி லங்குடிச் சீறூர்
எல்லடிப் படுத்த கல்லாக் காட்சி
வில்லுழு துண்மார் நாப்ப ணொல்லென
5 இழிபிறப் பாளர் கருங்கை சிவப்ப
 வலிதுரந்து சிலைக்கும் வன்கட் கடுந்துடி
புலிதுஞ்சு நெடுவரைக் குடிஞையோ டிரட்டும்
மலைகெழு நாடன் கூர்வேற் பிட்டற்