| குறுக லோம்புமின் றெவ்வி ரவனே | 10 | சிறுகண் யானை வெண்கோடு பயந்த | | ஒளிதிகழ் முத்தம் விறலியர்க் கீத்து நார்பிழிக் கொண்ட வெங்கட் டேறல் பண்மை நல்யாழ்ப் பாண்கடும் பருத்தி நசைவர்க்கு மென்மை யல்லது பகைவர்க் | 15 | கிரும்புபயன் படுக்குங் கருங்கைக் கொல்லன் | | விசைத்தெறி கூடமொடு பொரூஉம் உலைக்கல் லன்ன வல்லா ளன்னே. (170) |
திணை: வாகை. துறை: வல்லாண்முல்லை; தானைமறமுமாம். அவனை உறையூர் மருத்துவன் தாமோதரனார் பாடியது.
உரை: மரை பிரித் துண்ட நெல்லி வேலி - மரையாவாற் பிரித்துண்ணப்பட்ட நெல்லியாகிய வேலியை யுடைத்தாய்; பரலுடை முன்றில் - அதனது விதையாகிய பரலுடைத்தாகிய முற்றத்தினையுடைய; அங் குடிச் சீறூர் - அழகிய குடியையுடைய சிறிய வூரின்கண்; எல் அடிப் படுத்த - பகற்பொழுதெல்லாம் வேட்டையாடித் திரிந்த; கல்லாக் காட்சி வில்லுழு துண்மார் நாப்பண் - கல்வியில்லாத காட்சியையுடைய வில்லாகிய ஏரா லுழு துண்பாருடைய நடுவே; ஒல்லென - ஒல்லென்னு மோசையை யுடைத்தாக; இழி பிறப்பாளன் - இழிந்த பிறப்பினையுடைய புலையன்; கருங் கை சிவப்ப - தனது வலிய கை சிவப்ப; வலி துரந்து சிலைக்கும் வன் கண் கடுந் துடி - வலியான் முடுக்கிக் கொட்டும் வலிய கண்ணையுடைய அச்சத்தைச் செய்யும் துடி; புலி துஞ்சு நெடு வரைக் குடிஞையோடு இரட்டும் - புலி கிடக்கும் நெடிய மலையின்கண் பேராந்தையோடு கூடி யொலிக்கும்; மலை கெழு நாடன் கூர் வேல் பிட்டன் - மலைபொருந்திய நாட்டை யுடையனாகிய கூரிய வேலையுடைய பிட்டனை; குறுகல் ஓம்புமின் தெவ்விர் - அணுகுதலைப் பாதுகாமின் பகைவீர்; அவனே - அவன்தான்; சிறுகண் யானை வெண்கோடு பயந்து ஒளி திகழ் முத்தம்- சிறு கண்ணையுடைய யானையினது வெளிய கோடு தரப்பட்ட ஒளி விளங்கு முத்தத்தை; விறலியர்க்கு ஈத்து - விறலியருக்குக் கொடுத்து; நார் பிழிக் கொண்ட வெங்கள் தேறல் - நாரைப் பிழிந்துகொள்ளப்பட்ட விரும்பத்தக்க கள்ளாகிய தெளிவை; பண்ணமை நல் யாழ்ப் பாண் கடும்பு அருத்தி - பண் பொருந்தின நல்ல யாழினையுடைய பாணர் சுற்றத்தை நுகர்வித்து; நசைவர்க்கு மென்மை யல்லது - இவ்வாறு தன்பால் பரிசில் நச்சி |