பக்கம் எண் :

38

    

மிசையிருந்து வில்லேந்தியவழி அம்பு செலுத்தவும்,பரிசிலர்க்கு அருங்கலம்
வழங்கவும் பயன்படுவதால் நின் கை வன்மையாக வுளது; என் போலும்
பரிசிலர் மெய்ம் முயற்சியின்றிப் பிறர் நல்கப்பெறும் சோறுண்டு வருந்து
தொழில் தவிர, தொழில் இலராதலால் அவர் கை மென்மையாக உளது
என்று கூறுகின்றார்.

 கடுங்கண்ண கொல்களிற்றாற்
காப்புடைய வெழுமுருக்கிப்
பொன்னியற் புனைதோட்டியான்
முன்புதுரந்து சமந்தாங்கவும்
5. பாருடைத்த குண்டகழி
 நீரழுவ நிவப்புக் குறித்து
நிமிர்பரிய மாதாங்கவும்
ஆவஞ் சேர்ந்த புறத்தை தேர்மிசைச்
சாவ நோன்ஞாண் வடுக்கொள வழங்கவும்
10.பரிசிலர்க் கருங்கல நல்கவுங் குரிசில்
 வலிய வாகுநின் றாடோய் தடக்கை
புலவு நாற்றத்தை பைந்தடி
பூநாற் றத்த புகைகொளீஇ யூன்றுவை
கறிசோ றுண்டு வருந்துதொழி லல்லது
15.பிறிதுதொழி லறியா வாகலி னன்றும்
 மெல்லிய பெரும தாமே நல்லவர்க்
காரணங் காகிய மார்பிற் பொருநர்க்
கிருநிலத் தன்ன நோன்மைச்
செருமிகு சேஎய்நிற் பாடுநர் கையே. (14)

     திணை :அது.  துறை:  இயன்மொழி.  சேரமான்  செல்வக்
கடுங்கோ வாழியாதன் கபிலர்  கைப்பற்றி  “மெல்லிய  வாமால்
நுங்கை” எனக், கபிலர் பாடியது. 

உரை: கடுங் கண்ண கொல் களிற்றால் - வன் கண்மையை யுடைய
கொலையானையாலே; காப்புடைய எழு முருக்கி - காவலையுடைய
கணைய மரத்தை முறித்து; பொன் இயல்  புனை  தோட்டி யான் -
இரும்பாற் செய்யப்பட்ட அழகு செய்த அங்குசத்தால்; முன்பு துரந்து
- முன்னர்க்  கடாவி; சமம்  தாங்கவும் - அது செய்யும் வினையைப்
பின்வேண்டுமளவிலே  பிடிக்கவும்; பார்  உடைத்த  குண் டகழி -
வலிய நிலத்தைக்  குந்தாலியால்  இடித்துச்   செய்த   குழிந்த
கிடங்கின்கண்;   நீரழுவ  நிவப்புக்  குறித்து - நீர்ப்  பரப்பினது
ஆழமாகிய  உயர்ச்சியைக்  கருதி  அதன்கட்  செல்லாமல்; நிமிர்
பரியமா  தாங்கவும் - மிகைத்த  செலவினையுடைய  குதிரையைக்
குசைதாங்கி வேண்டுமளவிலே பிடிக்கவும்; ஆவம் சேர்ந்த புறத்தை -