மிசையிருந்து வில்லேந்தியவழி அம்பு செலுத்தவும்,பரிசிலர்க்கு அருங்கலம் வழங்கவும் பயன்படுவதால் நின் கை வன்மையாக வுளது; என் போலும் பரிசிலர் மெய்ம் முயற்சியின்றிப் பிறர் நல்கப்பெறும் சோறுண்டு வருந்து தொழில் தவிர, தொழில் இலராதலால் அவர் கை மென்மையாக உளது என்று கூறுகின்றார். | கடுங்கண்ண கொல்களிற்றாற் காப்புடைய வெழுமுருக்கிப் பொன்னியற் புனைதோட்டியான் முன்புதுரந்து சமந்தாங்கவும் | 5. | பாருடைத்த குண்டகழி | | நீரழுவ நிவப்புக் குறித்து நிமிர்பரிய மாதாங்கவும் ஆவஞ் சேர்ந்த புறத்தை தேர்மிசைச் சாவ நோன்ஞாண் வடுக்கொள வழங்கவும் | 10. | பரிசிலர்க் கருங்கல நல்கவுங் குரிசில் | | வலிய வாகுநின் றாடோய் தடக்கை புலவு நாற்றத்தை பைந்தடி பூநாற் றத்த புகைகொளீஇ யூன்றுவை கறிசோ றுண்டு வருந்துதொழி லல்லது | 15. | பிறிதுதொழி லறியா வாகலி னன்றும் | | மெல்லிய பெரும தாமே நல்லவர்க் காரணங் காகிய மார்பிற் பொருநர்க் கிருநிலத் தன்ன நோன்மைச் செருமிகு சேஎய்நிற் பாடுநர் கையே. (14) |
திணை :அது. துறை: இயன்மொழி. சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன் கபிலர் கைப்பற்றி மெல்லிய வாமால் நுங்கை எனக், கபிலர் பாடியது. உரை: கடுங் கண்ண கொல் களிற்றால் - வன் கண்மையை யுடைய கொலையானையாலே; காப்புடைய எழு முருக்கி - காவலையுடைய கணைய மரத்தை முறித்து; பொன் இயல் புனை தோட்டி யான் - இரும்பாற் செய்யப்பட்ட அழகு செய்த அங்குசத்தால்; முன்பு துரந்து - முன்னர்க் கடாவி; சமம் தாங்கவும் - அது செய்யும் வினையைப் பின்வேண்டுமளவிலே பிடிக்கவும்; பார் உடைத்த குண் டகழி - வலிய நிலத்தைக் குந்தாலியால் இடித்துச் செய்த குழிந்த கிடங்கின்கண்; நீரழுவ நிவப்புக் குறித்து - நீர்ப் பரப்பினது ஆழமாகிய உயர்ச்சியைக் கருதி அதன்கட் செல்லாமல்; நிமிர் பரியமா தாங்கவும் - மிகைத்த செலவினையுடைய குதிரையைக் குசைதாங்கி வேண்டுமளவிலே பிடிக்கவும்; ஆவம் சேர்ந்த புறத்தை - |