பக்கம் எண் :

386

 
 கருங்கனி நாவ லிருந்துகொய் துண்ணும்
பெரும்பெய ராதி பிணங்கரிற் குடநாட்
டெயினர் தந்த வெய்ம்மா னெறிதசைப்
பைஞ்ஞிணம் பொருத்த பசுவெள் ளமலை
15வருநர்க்கு வரையாது தருவனர் சொரிய
 இரும்பனங் குடையின் மிசையும்
பெரும்புலர் வைகறைச் சீர்சா லாதே.
 (177)

     திணையுந் துறையு மவை. மல்லிகிழான் காரியாதியை ஆவூர்
மூலங்கிழார் பாடியது.

     உரை: ஒளிறு வாள் மன்னர் ஒண் சுடர் நெடு நகர் -
விளங்கியவாளையுடைய வேந்தரது  ஒள்ளிய விளக்கத்திணையுடைய
உயர்ந்த கோயிற் கண்; கண் வெளிறு  போக - கண்ணொளி கெட;
பன்னாள் திரங்கி - பன்னாள் நின்றுலர்ந்து; பாடிப் பெற்ற
பொன்னணி யானை - அவ்விடத்துப்    பாடிப்    பெற்ற  
பொற்படை  யணிந்த யானை; தமரெனின்    யாவரும்  புகுப -
தமக்குச் சிறந்தாராயின் எல்லாரும் எளிதிற் புகப் பெறுவர்;
அமரெனின் திங்களும் நுழையா - போராயின் திங்களாலும்
நுழையப்படாத;  எந்திரப்     படு புழை - பொறிகளைப்
பொருந்திய இட்டிய வாயிலை யுடைத்தாய்; கள் மாறு நீட்ட - கள்ளை
யொருவர்க்கொருவர் மாறு மாறாக நீட்டிட; நணி நணி இருந்த குறும்
பல்    குறும்பின் - ஒன்றற்கொன்று அணித்தாயிருந்த குரிய பல
அரணின் கண்ணேயிருந்து; ததும்ப வைகி - அக்கள்ளை நிரம்பவுண்டு
காலங் கழித்து; புளிச் சுவை வேட்ட செங்கண் ஆடவர் - பின்னைச்
செருக்கினால் விடாய் மிக்குப் புளிச்சுவையை விரும்பிய மதத்தாற்
சிவந்த கண்ணையுடைய ஆண் மக்கள்; தீம் புளிக் களாவொடு துடரி
முனையின் - இனிய புப்பையுடைய களாப்பழத்துடனே துடரிப்
பழத்தைத் தின்று வெறுப்பின்; மட்டு அறல் நல் யாற்று எக்கர் ஏறி
- கரை மரத்துப் பைந்தேன் அரித் தொழுகுகின்ற நல்ல கான்
யாற்றினது மணற்குன்றின் கண்ணே யேறி; கருங் கனி நாவல் இரந்து
-கொய்துண்ணும் கரிய நாவற்பழத்தைப் பறித்து இருந் துண்ணும்;
பெரும் பெயர் ஆதி - பெரிய பெயரையுடைய னாகிய ஆதியினது;
பிணங் கரில் குட நாட்டு - பிணங்கிய அரில் பட்ட
காட்டடையுடைய குடநாட்டின்கண்; எயினர் தந்த எய்ம்மான் எறி
தசை - மறவர் எய்து கொடு வரப்பட்ட எய்ப் பன்றியினது
கடியப்பட்ட தசையினது; பைஞ்ஞிணம் பெருத்த பசுவெள் அமலை -
செவ்வியையுடைய நிணமிக்க புதிய வெண்சோற்றுக் கட்டியை;
வருநர்க்கு வரையாது தருவனர் சொரிய - வருவார்க்கெல்லாம்
ஒப்பக் கொடுவந்து சொரிய; இரும் பனங்குடையின் மிசையும்
பெரிய பனையோலையான் இயன்ற குடையிலே நுகரும்;