பக்கம் எண் :

41

    
 கடுந்தேர் குழித்த ஞெள்ள லாங்கண்
வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டிப்
பாழ்செய் தனையவர் நனந்தலை நல்வெயில்
புள்ளின மிமிழும் புகழ்சால் விளைவயல்
5. வெள்ளுளைக் கலிமான் கவிகுளம் புகளத்
 தேர்வழங் கினைநின் றெவ்வர் தேஎத்துத்
துளங்கியலாற் பணையெருத்திற்
பாவடியாற் செறனோக்கின்
ஒளிறுமருப்பிற் களிறவர
10 காப்புடைய கயம்படியினை
 அன்ன சீற்றத் தனையை யாகலின்
விளங்குபொன் னெறிந்த நலங்கிளர் பலகையொடு
நிழல்படு நெடுவே லேந்தி யொன்னார்
ஒண்படைக் கடுந்தார் முன்புதலைக் கொண்மார்
15.நசைதர வந்தோர் நசைபிறக் கொழிய
  வசைபட வாழ்ந்தோர் பலர்கொல் புரையில்
நற்பனுவ னால்வேதத்
தருஞ்சீர்த்திப் பெருங்கண்ணுறை
நெய்ம்மலி ஆவுதி பொங்கப் பன்மாண்
20. வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி
 யூப நட்ட வியன்களம் பலகொல்
யாபல கொல்லோ பெரும வாருற்று
விசிபிணிக் கொண்ட மண்கனை முழவிற்
பாடினி பாடும் வஞ்சிக்கு
25. நாடல் சான்ற மைந்தினோய் நினக்கே. (15)

     திணையும் துறையும் அவை. பாண்டியன் பல்யாகசாலை
முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடியது.

     உரை:கடுந்தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண் -விரைந்த தேர்
குழித்த தெருவின்கண்ணே; வெள் வாய்க் கழுதைப் புல்லினம்
பூட்டி - வெளிய   வாயையுடைய  கழுதையாகிய  புல்லிய  
நிரையைப்  பூட்டி யுழுது;பாழ்  செய்தனை  -  பாழ்  படுத்தினை;
அவர் நனந்தலை  நல்லெயில்  -   அவருடைய    அகலிய
இடத்தையுடைய   நல்ல  அரண்களை;  புள்ளினம்  இமிழும்
புகழ்சால் விளை வயல் - புள்ளினங்கள்  ஒலிக்கும்  புகழமைந்த
விளை கழனிக்  கண்ணே; வெள்ளுளைக்  கலிமான் கவி குளம்பு
உகள   -   வெளிய  தலையாட்டமணிந்த  மனஞ்  செருக்கிய
குதிரையினுடைய கவிந்த குளம்புகள்