பக்கம் எண் :

42

    

தாவ; நின் தெவ்வர் தேஎத்துத் தேர் வழங்கினை -நின்னுடைய
பகைவர் தேஎத்துக்கண் தேரைச் செலுத்திணை; துளங்கியலால்
பணை    யெருத்தின் -   அசைந்த   தன்மையோடு பெரிய
கழுத்தினையும்; பா வடியால்  செறல்   நோக்கின் -  பரந்த
அடியோடு  வெகுட்சி பொருந்திய   பார்வையினையும், ஒளிறு
மருப்பின்  களிறு - விளங்கிய கோட்டினையுமுடைய களிற்றை;
அவர காப்புடைய கயம் படியினை - அப்பகைவருடையனவாகிய
காவலையுடைய வாவிக்கட்  படிவித்தனை;  அன்ன  சீற்றத்து
அனையை - அப்பெற்றிப்பட்ட   சினத்துடனே   அதற்கேற்ற
செய்கையையுடைய; ஆகலின் - ஆதலான்; விளங்கு   பொன்
எறிந்த  நலங்கிளர்  பலகையொடு  -விளங்கிய   இரும்பாற்
செய்யப்பட்ட ஆணியும்  பட்டமும்   அறைந்த  அழகுமிக்க
பலகையுடனே;  நிழல்படு  நெடுவேல் ஏந்தி -  நிழலுண்டாகிய
நெடிய வேலை  யெடுத்து;  ஒன்னார் -  பகைவர்;  ஒண்படைக்
கடுந்தார் - ஒள்ளிய படைக்கலங்களையுடைய நினது   விரைந்த
தூசிப்படையின்; முன்பு தலைக்கொண்மார் -வலியைக் கெடுத்தல்
வேண்டி; நசைதர வந்தோர் - தம் ஆசை கொடுவர வந்தோர்;
நசை பிறக்கொழிய - அவ்வாசை பின்னொழிய; வசை  பட
வாழ்ந்தோர் பலர்கொல் -  வசையுண்டாக   உயிர் வாழ்ந்தோர்
பலரோ?;  நற்பனுவல் -
குற்றமில்லாத   நல்ல தரும   நூலினும்;
நால் வேதத்து - நால்வகைப்பட்ட வேதத்தினும்  சொல்லப்பட்ட;
அருஞ்சீர்த்தி - எய்தற்கரிய மிக்க புகழுடைய; பெருங் கண்ணுறை
நெய்ம் மலி ஆவுதி பொங்க -  சமிதையும் பொரியும் முதலாகிய
பெரிய கண்ணுறையோடு நெய் மிக்க புகை மேன்மேற்  கிளர;
பன்மாண்  வீயாச  சிறப்பின்-பல  மாட்சிமைப்பட்ட  கெடாத
தலைமையையுடைய; வேள்வி முற்றி - யாகங்களை முடித்து; யூபம்
நட்ட   வியன்களம்  பலகொல்-தூண்நடப்பட்டஅகன்ற வேள்
விச்சாலைகள் பலவோ?; யா பலகொல் -இவற்றுள் யாவையோ
பல? ; பெரும-; விசி பிணிக் கொண்ட   மண்கனை  முழவின்
- வார் பொருந்தி வலித்துகட்டுதலைப் பொருந்திய மார்ச்சனை
செறிந்த தண்ணுமையையுடைய;  பாடினி  பாடும் வஞ்சிக்கு -
விறலி பாடும் மேற்செலவிற்கு ஏற்ப; நாடல்  சான்றமைந்தினோய் -
ஆராய்தலமைந்த வலிமையுடையோய்; நினக்கு-; எ-று.

     பூட்டி   யென்னும்   வினையெச்சத்திற்கு  உழு  தென்னுஞ்சொல்
தந்துரைக்கப்பட்டது. நற்பனுவல் நால்வேதத்து வேள்வி யென இயையும்.
நற்பனுவலாகிய நால்வேத மென்பாரு முளர்.

பெரும, மைந்தினோய், பாழ்  செய்தனை, தேர்  வழங்கினை, கயம்
படியினை; ஆதலின், நினக்கு ஒன்னாராகிய வசைபட வாழ்ந்தோர் பலர்