| நீடு வாழிய நெடுந்தகை யானும் கேளில் சேஎய் நாட்டினெந் நாளும் | 25 | துளிநசைப் புள்ளினின் னளிநசைக் கிரங்கிநின் | | அடிநிழற்பழகிய வடியுறை கடுமான் மாற மறவா தீமே. (198) |
திணையுந் துறையு மவை. பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறன் பரிசில் நீட்டித்தானை வடம வண்ணக்கன் பேரி சாத்தனார் பாடியது.
உரை: அருவி தாழ்ந்த பெரு வரை போல - அருவி தாழ்ந்த பெரிய மலை போல; ஆரமொடு பொலிந்த மார்பின் - ஆரத்தோடு பொலிந்த மார்பின்கண்; தண்டா வேட்கை தணியாத; கடவுள் சான்ற கற்பின் - தெய்வத்தன்மை யமைந்த கற்பினையும்; சேயிழை மடவோள் பயந்த - செய்ய ஆபரணத்தையுமுடைய உன்னுடைய மடவோள் பெறப்பட்ட; மணி மருள் அவ் வாய்க் கிண்கிணிப் புதல்வர் - பவழ மணிபோன்ற அழகிய வாயையும் கிண்கிணியையு முடைய புதல்வர்; பொலிக என்றேத்தி - பொலிக வென்று வாழ்த்தி; திண் தேர் அண்ணல் - திண்ணிய தேரையுடைய வேந்தே; நிற் பாராட்டி - நின்னைப் புகழ்ந்து; காதல் பெருமையின் கனவிலும் அரற்றும் - பரிசிலின் மேல் அன்பு பெரிதாகலின் கனவின்கண்ணும் நின் புகழையே கூறும்; என் காமர் நெஞ்சம் ஏமாந்து உவப்ப - எனது விருப்பத்தையுடைய நெஞ்சம் இன்புற்று மகிழ; ஆலமர் கடவுள் அன்ன நின் செல்வம் - ஆலிலையின்கண் மேவிய திருமால்போலும் நின்னுடைய செல்வத்தை யெல்லாம்; வேல் கெழு குருசில் - வேலையுடைய தலைவ; கண்டேனாதலின் - கண்டே னாதலால்; விடுத்த னென் - விடை கொண்டேன்; வாழ்க நின் கண்ணி - வாழ்க நினது கண்ணி; தொடுத்த தண் தமிழ் வரைப்பகம் - தொடர்புபட்ட குளிர்ந்த தமிழ்நாட் டெல்லை முழுதும்; கொண்டியாகப் பணித்துக் கூட்டுண்ணும் - கொள்ளையாகக்கொண்டு நின்பகைவரைத் தாழ்த்து அவர்கள் பொருள்களையும் வாங்கிக் கொண்டு உண்ணும்; தணிப் பருங் கடுந் திறல் நின்னோ ரன்ன நின் புதல்வர் - தணித்தற்கரிய மிக்க வலியையுடைய நின்னை யொக்கும் வலியையுடைய நின்னுடைய மைந்தர்; என்றும் ஒன்னார் வாட - எந்நாளும் பகைவர் தேய; அருங் கலம் தந்து - அவருடைய பெறுதற்கரிய அணிகலத்தைக் கொண்டுவந்து; நும் பொன்னுடை நெடு நகர் நிறைய வைத்த - நும்முடைய பொன்னுடைய நெடிய நகரின்கண் பொலிய வைத்த; நின் முன்னோர் போல்க இவர் பெருங் கண்ணோட்டம் - நின்னுடைய |