பக்கம் எண் :

434

 
5கழைமிசைத் துஞ்சுங் கல்லக வெற்ப
நிணந்தின்று செருக்கிய நெருப்புத்தலை நெடுவேற்
களங்கொண்டு கனலுங் கடுங்கண் யானை
விளங்குமணிக் கொடும்பூண் விச்சிக் கோவே
இவரே, பூத்தலை யறாஅப் புனைகொடி முல்லை
10நாத்தழும் பிருப்பப் பாடா தாயினும்
கறங்குமணி நெடுந்தேர் கொள்கெனக் கொடுத்த
பரந்தோங்கு சிறப்பிற் பாரி மகளிர்
யானே, பரிசிலன் மன்னு மந்தண னீயே
வரிசையில் வணக்கும் வாண்மேம் படுநன்
15நினக்கியான் கொடுப்பக் கொண்மதி சினப்போர்
அடங்கா மன்னரை யடக்கும்
மடங்கா விளையு ணாடுகிழ வோயே.
 (200)

     திணை: அது. துறை: பரசிற்றுறை. பாரி மகளிரை விச்சிக்
கோனுழைக்கொண்டு சென்ற கபிலர் பாடியது.

     உரை: பனி வரை நிவந்த பாசிலைப் பலவின் கனி - குளிர்ந்த
மலையின்கண் ஓங்கிய பசிய இலையையுடைய பலாவினது பழத்தை;
கவர்ந்துண்ட கருவிரல் கடுவன் - கவர்ந்துண்ட கரிய விரலையுடைய
கடுவன்; செம்முக மந்தியொடு சிறந்து - சிவந்த முகத்தையுடைய தனது
மந்தியுடனே பொலிந்து; சேண் விளங்கி சேய்மைக்கண்ணே விளங்கி;
மழை மிசை யறியா மால்வரை யடுக்கத்து - முகிலாலும் உச்சி
யறியப்படாத உயர்ந்த மலைப் பக்கத்து; கழை மிசைத் துஞ்சும் கல்லக
வெற்ப - மூழ்கிலுச்சியின்கண் துயிலும் மலையகத்துத் தாழ்ந்த
வரையை யுடையோய்; நிணம் தின்று செருக்கிய நெருப்புத்தலை நெடு
வேல் - நிணத்தைத் தின்று களித்த நெருப்புப்போலும் தலையையுடைய
நெடிய வேலினையும்; களம் கொண்டு கனலும்: கடுங்கண் யானை -
களத்தைத் தனதாக்கிக்கொண்டு காயும் தறுகண்மையையுடைய
யானையினையும்; விளங்கு மணிக் கொடும் பூண் விச்சிக்கோவே -
விளங்கிய மணிகளால் செய்யப்பட்ட வளைந்த
ஆபரணத்தினையுமுடைய விச்சிக் கோவே; இவர் - இவர்கள்தாம்;
பூத்தலை அறாஅப் புனை கொடி முல்லை - பூவைத் தனது
தலையின்கண் மாறாத அலங்கரித்தாற்போலும் கொடி முல்லைதான்;
நாத் தழும்பு இருப்பப் பாடா தாயினும் - நாத் தழும்பேறப்
படாதாயினும்; கறங்கு மணி நெடுந் தேர் கொள்க எனக் கொடுத்த -
ஒலிக்கும் மணியையுடைய நெடிய தேரைக் கொள்க வென்று சொல்லிக்
கொடுத்த; பரந்து ஓங்கு சிறப்பின் பாரி மகளிர் - பரந்து மேம்பட்ட
தலைமையினையுடைய பாரிக்கு மகளிர்;