பக்கம் எண் :

61

    
 அருங்குறும் புடுத்த கானப் பேரெயில்
கருங்கைக் கொல்லன் செந்தீ மாட்டி
இரும்பு ணீரினு மீட்டற் கரிதென
வேங்கை மார்ப னிரங்க வைகலும்
10. ஆடுகொளக் குழைந்த தும்பைப் புலவர்
  பாடுதுறை முற்றிய கொற்ற வேந்தே
இகழுந ரிசையொடு மாயப்
புகழொடு விளங்கிப் பூக்கநின் வேலே.
(21)

      திணையும் துறையும் அவை.  கானப்   பேரெயில்  கடந்த
உக்கிரப் பெருவழுதியை ஐயூர் மூலங்கிழார் பாடியது.

     உரை: புலவரை யிறந்த புகழ் சால் தோன்றல் -  நின்னைப்
பாடுவாரது அறிவின் எல்லையைக்  கடந்த  புகழமைந்த  தலைவ;
நிலவரை இறந்த குண்டு கண் அகழி -  நிலவெல்லையைக் கடந்த
பாதலத்தே   யுற   ஆழ்ந்த   இடத்தையுடைய  அகழியினையும்;
வான்தோய் வன்ன புரிசை -உயர்ச்சியால் வானைப் பொருந்துவது
போன்ற மதிலையும்; விசும்பின் மீன் பூத் தன்ன உருவ ஞாயில் -
அவ்வானிடத்து   மீனைப்   பூத்தாற்போன்ற   வடிவையுடைய
சூட்டினையும்;  கதிர்  நுழை  கல்லா  மரம்  பயில்  கடிமிளை -
வெயிற்கதிர்  நுழையாத   மரஞ்   செறிந்த  காவற்காட்டினையு
முடைத்தாய்;   அருங்  குறும்பு   உடுத்த  கானப்   பேரெயில் -
அணைதற்கரிய  சிற்றரண்களாற்  சூழப்பட்ட கானப்பே ரென்னு
மரண்;  கருங்   கைக்   கொல்லன் -   வலிய கையையுடைய
கொல்லனால்; செந்   தீ   மாட்டிய - செந்   தீயின் கண்ணே
மாட்டப்பட்ட; இரும் புண்  நீரினும்  மீட்டற் கரிது என -
இரும்புண்ட நீரினும் மீட்டற் கரிதெனக் கருதி; வேங்கை மார்பன்
இரங்க - வேங்கை மார்பன் வருந்த; வைகலும்- நாடோறும்; ஆடு
கொளக் குழைந்த தும்பை -   வென்றி   கொளத்     தழைத்த
தும்பையையுடைய; புலவர் பாடு துறை முற்றிய-புலவர் பாடப்படும்
துறைகளை    முடித்த; கொற்ற வேந்தே - வெற்றியினையுடைய
வேந்தே; இகழுநர் இசையொடு மாய - நின்னை மதியாத பகைவர்
தம்முடைய புகழுடனே பொன்ற; புகழொடு விளங்கி  - வெற்றிப்
புகழுடனே விளங்கி; பூக்க நின் வேல் - பொலிவதாக நின் வேல்
எ-று.

     கானப் பேரெயில் மீட்டற் கரிதென வேங்கை  மார்பன்   இரங்கப்
பாடுதுறை முற்றிய கொற்ற வேந்தே, நின் வேல் பூக்க  வெனக்   கூட்டி
வினைமுடிவு செய்க. குழைத்த வென்பது குழைந்த வென மெலிந்து நின்றது.

     விளக்கம்: உக்கிரப் பெருவழுதியின் புகழ் மிகுதி, புலவரது  புலமை
யெல்லையைக் கடந்து நிற்பது என்பது தோன்ற, “புலவரையிறந்த புகழ்சால்