| கடிமரந் துளங்கிய காவு நெடுநகர் | 10. | வினைபுனை நல்லில் வெவ்வெரி யினைப்பக் | | கனையெரி யுரறிய மருங்கு நோக்கி நண்ணார் நாண நாடொறுந் தலைச்சென் றின்னு மின்னபல செய்குவன் யாவரும் துன்னல் போகிய துணிவி னோனென | 15. | ஞால நெளிய வீண்டிய வியன்படை | | ஆலங் கானத் தமர்கடந் தட்ட கால முன்பநிற் கண்டனென் வருவல் அறுமருப் பெறிகலை புலிப்பாற் பட்டெனச் சிறுமறி தழீஇய தெறிநடை மடப்பிணை | 20. | பூளை நீடிய வெருவரு பறந்தலை | | வேளை வெண்பூக் கறிக்கும் ஆளி லத்த மாகிய காடே. (23) |
திணையும் துறையும் அவை. துறை: நல்லிசை வஞ்சியுமாம். பாண்டியனதலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியனைக் கல்லாடனார் பாடியது. உரை: வெளிறில் நோன் காழ் பணை - வெண்மையில்லாத வலிய வயிரக் கம்பத்தையுடைய கூடத்தில்; நிலை முனைஇ - நிற்றலை வெறுத்துச் சென்று; களிறு படிந் துண்டென - யானை படிந்து நீருண்டதாக; கலங்கிய துறையும் - கலக்கமுற்ற துறையையும்; கார் நறுங் கடம்பின் பாசிலைத் தெரியல் - கார்காலத்து நறிய கடம்பினது பசிய இலையோடு விரவிய மாலையையுடைய; சூர் நவை முருகன் சுற்றத் தன்ன - சூரபன் மாவைக் கொன்ற முருகனது கூளிச் சுற்றத்தை யொக்கும்; நின் கூர் நல் அம்பின் கொடு வில் கூளியர் - நின்னுடைய கூரிய நல்ல அம்பினையும் வளைந்த வில்லினையுமுடைய மறவர்; கொள்வது கொண்டு - தம்மால் கொள்ளலாவதனை முகந்துகொண்டு; கொள்ளா மிச்சில் - கொள்ளாத ஒழி பொருளை; கொள்பதம் ஒழிய வீசிய புலனும் - மாற்றார் முகந்துகொள்ளப்படும் உணவாக்காமல் சிதறிய நிலங்களையும் - வடி நவில் நவியம் பாய்தலின் - வடித்தல் பயின்ற கோடாலி வெட்டுதலான்; ஊர் தொறும் கடிமரம் துளங்கியகாவும் - ஊர்தோறும் காவல் மரங்கள் நிலைகலங்கிய காவையும்; நெடு நகர் வினை புனை நல்லில் - நெடிய நகரின்கண் தொழில் புனைந்த நல்ல மனைகளிடத்து; வெவ் வெரி இனைப்ப - விரும்பும் அடு தீயைக் கெடுக்க; கனை எரி உரறிய மருங்கும் - மிக்க தீ முழங்கிய பக்கத்தையும்; நோக்கி - பார்த்து; நண்ணார் நாண - |