பக்கம் எண் :

70

    
 எல்வளை மகளிர் தலைக்கை தரூஉந்து
10. வண்டுபட மலர்ந்த தண்ணறுங் கானல்
 முண்டகக் கோதை யொண்டொடி மகளிர்
இரும்பனையின் குரும்பைநீரும்
பூங்கரும்பின் றீஞ்சாறும்
ஓங்குமணற் குவவுத்தாழைத்
15.தீநீரோ டுடன்விராஅய்
 முந்நீ ருண்டு முந்நீர்ப் பாயும்
தாங்கா வுறையு ணல்லூர் கெழீஇய
ஓம்பா வீகை மாவே ளெவ்வி
புனலும் புதவின் மிழலையொடு கழனிக்
20.கயலார் நாரை போர்விற் சேக்கும்
 பொன்னணி யானைத் தொன்முதிர் வேளிர்
குப்பை நெல்லின் முத்தூறு தந்த
கொற்ற நீள்குடைக் கொடித்தேர்ச் செழிய
நின்று நிலை இயர்நின் னாண்மீ னில்லாது
25.படாஅச் செலீ இயர்நின் பகைவர் மீனே
 நின்னொடு, தொன்று மூத்த வுயிரினு முயிரொடு
நின்று மூத்த யாக்கை யன்னநின்
ஆடுகுடி மூத்த விழுத்திணைச் சிறந்த
வாளின் வாழ்நர் தாள்வலம் வாழ்ந்த
30. இரவன் மாக்க ளீகை நுவல
  ஓண்டொடி மகளிர் பொலங்கலத் தேந்திய
தண்கமழ் தேறன் மடுப்ப மகிழ்சிறந்
தாங்கினி தொழுகுமதி பெரும வாங்கது
வல்லுநர் வாழ்ந்தோ ரென்ப தொல்லிசை
35. மலர்தலை யுலகத்துத் தோன்றிப்
 பலர்செலச் செல்லாது நின்றுவிளிந் தோரே. (24)

     திணை: பொதுவியல். துறை: பொருண்மொழிக் காஞ்சி. அவனை
மாங்குடி கிழார் பாடியது.

     உரை: நெல்  அரியும்  இருந்தொழுவர் -  நெல்லை  யரியும்
பெரிய   உழவர்;    செஞ்ஞாயிற்று     வெயில்    முனையின்-
செஞ்ஞாயிற்றினது வெயிலை வெறுப்பின்   தெண்   கடல்   திரை
மிசைப் பாயுந்து -  தெளிந்த  கடற்றிரையின்மேலே பாயும்; திண்
திமில் வன் பரதவர் -திண்ணியண