| | பூம்போது சிதைய வீழ்ந்தெனக் கூத்தர் ஆடுகளங் கடுக்கு மகநாட் டையே | 15. | அதனால், அறனும் பொருளு மின்பமு மூன்றும் | | ஆற்றும் பெருமநின் செல்வம் ஆற்றா மைந்நிற் போற்றா மையே. (28) | திணை: பொதுவியல். துறை: இயன்மொழி வாழ்த்து; முதுமொழிக் காஞ்சியுமாம். அவனை அவர் பாடியது.
உரை: சிறப்பில் சிதடும் - மக்கட் பிறப்பிற் சிறப்பில்லாத குருடும்; உறுப்பில் பிண்டமும் - வடிவில்லாத தசைத் திரளும்;கூனும் குறளும் ஊமும் செவிடும் மாவும் மருளும் உளப்பட-; வாழ்நர்க்கு- உலகத்து உயிர் வாழ்வார்க்கு; எண் பேர் எச்சம் என்ற இவை யெல்லாம் - எட்டு வகைப்பட்ட பெரிய எச்சமென்று சொல்லப்பட்ட இவையெல்லாம்; பேதைமை யல்லது - பேதைத் தன்மையுடைய பிறப்பாவதல்லது; ஊதிய மில்லென - இவற்றாற் பயனில்லை யென; முன்னும் அறிந்தோர் கூறினர் - முற்காலத்தும் அறிந்தோர் சொன்னார்; இன்னும் அதன் திறம் யான் உரைக்க வந்தது - இன்னமும் அவ்வூதியத்தின் பாகுபாட்டை யான் சொல்ல வந்தது; வட்ட வரிய செம்பொறிச் சேவல் - வட்டமாகிய வரியை யுடைத்தாகிய செம் பொறியையுடைய காட்டுக் கோழிச் சேவல்; ஏனல் காப்போர் உணர்த்திய கூஉம் -தினைப்புனங் காப்போரைத் துயிலுணர்த்துவதாகக் கூவும்; கானத்தோர் நின் தெவ்வர் - காட்டின்கண் உள்ளோர் நின்னுடைய பகைவர்; நீயே - நீ தான்; புறஞ்சிறை மாக்கட்கு -வேலிப்புறத்து நின்று வேண்டிய மாக்கட்கு; அறம் குறித்து - அறத்தைக் கருதி; அகத்தோர் புய்த் தெறி கரும்பின் விடு கழை - அகத்துள்ளோர் தாம் பிடுங்கி யெறியும் கரும்பாகிய போகடப்பட்ட கழை; தாமரைப் பூம் போது சிதைய வீழ்ந்தென - வாவியகத்துத் தாமரையினது பொலிந்த பூச் சிதற வீழ்ந்ததாக; கூத்தர் ஆடு களம் கடுக்கும் அக நாட்டை - அது கூத்தர் ஆடு களத்தை யொக்கும் உள்ளாகிய நாட்டையுடையை; அதனால் - ஆதலான்; அறனும் பொருளும் இன்பமும் மூன்றும் ஆற்றும் நின் செல்வம் - அறனும் பொருளும் இன்பமு மென்னப்பட்ட மூன்றும் செய்வதற் குதவும் நினது செல்வம்; பெரும-; ஆற்றாமை நிற் போற்றாமை உதவா தொழிதல் நின்னைப் பாதுகாவாமை எ-று.
பிண்ட மென்பது மணை போலப் பிறக்குமது. மா வென்பது விலங்கு வடிவாகப் பிறக்குமது. மரு ளென்பது அறிவின்றியே மயங்கி யிருக்குமது. ஊதிய மென்பது, அறம் பொரு ளின்பங்களை; அன்றி அறமென்பாரு முளர்.
|