பக்கம் எண் :

84

    
25.நகைப்புற னாகநின் சுற்றம்
 இசைப்புற னாகநீ யோம்பிய பொருளே. (29)

     திணையும் துறையு மவை. அவனை அவர் பாடியது.

     உரை: அழல் புரிந்த அடர் தாமரை - எரியா லாக்கப்பட்ட
தகடாகச் செய்த தாமரைப் பூவுடனே; ஐது அடர்ந்த நூல் பெய்து -
ஐதாகத் தட்டிக் கம்பியாகச் செய்த நூலின் கண்ணேயிட்டு; புனை
வினைப்  பொலிந்த  பொலன்  நறுந்  தெரியல் -  அலங்கரித்த
தொழிலாற் பொலிந்த பொன்னான் இயன்ற நறிய மாலையை; பாறு
மயிர் இருந் தலை பொலியச் சூடி - பாறிய மயிரையுடைய கரிய
தலை பொலிவு பெறச் சூடி; பாண்  முற்றுக  நின்  நாள்  மகிழ்
இருக்கை - பாண்  சுற்றம்  சூழ்வதாக   நினது  நாட்  காலத்து
மகிழ்ந்திருக்கும் ஓலக்கம்; பாண் முற்று ஒழிந்த பின்றை - பாண்
சுற்றம் சூழ லொழிந்த பின்னர்; மகளிர் தோள் முற்றுக நின் சாந்து
புலர் அகலம்- நினது உரிமை மகளிருடைய தோள் சூழ்வதாக நின்
சாந்து புலர்ந்த மார்பம்; முனிவில் முற்றத்து இனிது முரசு இயம்ப -
எப்போதும்  வெறுப்பில்லாத   அலங்காரத்தையுடைய   கோயில்
முற்றத்தின் கண்ணே  இனிதாக  முரசு  ஒலிப்ப;   கொடியோர்த்
தெறுதலும் செவ்வியோர்க்கு  அளித்தலும்  ஒடியா முறைமையின் -
தீயோரைத் தண்டஞ் செய்தலும்  நடுவு  நிலைமை யுடையோர்க்கு
அருள் பண்ணுதலுமாகிய இடையறாத முறைமையால்; மடிவிலை யாகி
- சோம்புதலையுடைய யல்லையாகி;  நல்லதன்  நலனும்  தீயதன்
தீமையும் இல்லை என்போர்க்கு -  நல்வினையினது   நன்மையும்
தீவினையினது  தீமையும்    இல்லையென்று    சொல்லுவோர்க்கு;
இனனாகிலியர் - இனமாகா தொழிவாயாக; நெல்  விளை  கழனிப்
படுபுள் ஒப்புநர் - நெல் விளைந்த வயலிடத்  துளதாகிய புள்ளை
யோட்டுவோர்; ஒழி மடல் விறகில்  கழி  மீன்  சுட்டு - வீழ்ந்த
பனங்கருக்காகின்ற விறகால் கழிக்கண் மீனைச் சுட்டு; வெங்கள்
தொலைச்சியும் அம்மையார் - அதனுடனே வெய்ய மதுவையுண்டு
தொலைத்தும்  அமையாராய்;  தெங்கின்  இளநீர்  உதிர்க்கும் -
தெங்கினது  இளநீரை  யுதிர்க்கும்; வளமிகு நன்னாடு பெற்றனர்
உவக்கும் - செல்வ மிக்க நல்ல நாட்டைப் பெற்று மகிழும்; நின்
படை  கொள்  மாக்கள்  - நின்னுடைய - படைக்கலம் பிடித்த
மாந்தர்; பற்றா  மாக்களின் - நின்னுடைய  பகைவரைப்  போல;
பரிவு  முந்துறுத்து  - இரக்கத்தை முன்னிட்டுக்கொண்டு; கூவை
துற்ற -கூவை இலையால் வேயப்பட்ட; நாற்கால் பந்தர் சிறு மனை
வாழ்க்கையின் ஒரீஇ - நான்கு காலையுடைய பந்தராகிய சிறிய
இல்லின்கண் வாழும் வாழ்க்கையினின்று நீங்கி;