|   | ஏரின்             வாழ்நர் பேரி லரிவையர் | 
| 5. |              குளக்கீழ் விளைந்த களக்கொள் வெண்ணெல் | 
|   | முகந்தனர்             கொடுப்ப வுகந்தனர் பெயரும்             தென்னம் பொருப்ப னன்னாட் டுள்ளும்             ஏழெயிற் கதவ மெறிந்துகைக் கொண்டுநின்             பேழ்வா யுழுவை பொறிக்கு மாற்றலை | 
| 10. |              பாடுநர் வஞ்சி பாடப் படையோர் | 
|   |              தாதெரு மறுகிற் பாசறை பொலியப்             புலராப் பச்சிலை யிடையிடுபு தொடுத்த             மலரா மாலைப் பந்துகண் டன்ன             ஊன்சோற் றமலை பாண்கடும் பருத்தும் | 
| 15. |              செம்மற் றம்மநின் வெம்முனை யிருக்கை | 
|   | வல்லோன்             றைஇய வரிவனப் புற்ற             அல்லிப் பாவை யாடுவனப் பேய்ப்பக்             காம விருவ ரல்லதி யாமத்துத்             தனிமகன் வழங்காப் பனிமலர்க் காவின் | 
| 20 |              ஒதுக்கின் றிணிமணற் புதுப்பூம் பள்ளி | 
|   | வாயின்             மாடந்தொறு மைவிடை வீழ்ப்ப             நீயாங்குக் கொண்ட விழவினும் பலவே. (33) |