பக்கம் எண் :

92

    
 ஏரின் வாழ்நர் பேரி லரிவையர்
5. குளக்கீழ் விளைந்த களக்கொள் வெண்ணெல்
 முகந்தனர் கொடுப்ப வுகந்தனர் பெயரும்
தென்னம் பொருப்ப னன்னாட் டுள்ளும்
ஏழெயிற் கதவ மெறிந்துகைக் கொண்டுநின்
பேழ்வா யுழுவை பொறிக்கு மாற்றலை
10. பாடுநர் வஞ்சி பாடப் படையோர்
  தாதெரு மறுகிற் பாசறை பொலியப்
புலராப் பச்சிலை யிடையிடுபு தொடுத்த
மலரா மாலைப் பந்துகண் டன்ன
ஊன்சோற் றமலை பாண்கடும் பருத்தும்
15. செம்மற் றம்மநின் வெம்முனை யிருக்கை
 வல்லோன் றைஇய வரிவனப் புற்ற
அல்லிப் பாவை யாடுவனப் பேய்ப்பக்
காம விருவ ரல்லதி யாமத்துத்
தனிமகன் வழங்காப் பனிமலர்க் காவின்
20 ஒதுக்கின் றிணிமணற் புதுப்பூம் பள்ளி
 வாயின் மாடந்தொறு மைவிடை வீழ்ப்ப
நீயாங்குக் கொண்ட விழவினும் பலவே. (33)

     திணை: வாகை. துறை: அரசவாகை. அவனை அவர் பாடியது.

     உரை: கான் உறை வாழ்க்கை - காட்டின் கண்ணே தங்கும்
வாழ்க்கையையுடைய; கத நாய் வேட்டுவன் - சினம் பொருந்திய
நாயையுடைய  வேட்டுவன்;  மான்  தசை  சொரிந்த  வட்டியும் -
மானினது தசையைச் சொரிந்த கடகமும்; ஆய் மகள் தயிர் கொடு
வந்த தசும்பும் - இடை  மகள்  தயிர்கொண்டு  வந்த  மிடாவும்;
நிறைய-; ஏரின் வாழ்நர் பேரில் அரிவையர் - ஏரான் உழுதுண்டு
வாழ்வாரது பெரிய மனையின்கண் மகளிர்;  குளக்கீழ்  விளைந்த -
குளத்துக்கீழ் விளைந்த;  களக்கொள்  வெண்ணெல்  முகந்தனர்
கொடுப்ப - களத்தின்கட் கொள்ளப்பட்ட வெண்ணெல்லை முகந்து
கொடுப்ப;   உகந்தனர்   பெயரும் - உவந்து  மீளும்;  தென்னம்
பொருப்பன்   நன்னாட்டுள்ளும்  -  தென்றிசைக்கட்  பொதியின்
மலையையுடைய பாண்டியனது நல்ல நாட்டுள்ளும்; ஏழெயில் கதவம்
எறிந்து கைக் கொண்டு - ஏழாகிய அரணின்கட் கதவத்தை யதித்துக்
கைக்கொண்டு; நின் பேழ் வாய் உழுவை பொறிக்கும் ஆற்றலை -
நினது பெரிய வாயையுடைய புலியைப் பொறிக்கும் வலியை
ஆதலான்; பாடுநர் வஞ்சி பாட -