பக்கம் எண் :

101

     
 யானை தந்த முளிமர விறகிற்
கானவர் பொத்திய ஞெலிதீ விளக்கத்து
மடமான் பெருநிரை வைகுதுயி லெடுப்பி
மந்தி சீக்கு மணங்குடை முன்றிலின்
5நீர்வார் கூந்த லிரும்புறந் தாழப்
 பேரஞர்க் கண்ணள் பெருங்காடு நோக்கித்
தெருமரு மம்ம தானேதன் கொழுநன்
முழவுகண் டுயிலாக் கடியுடை வியனகர்ச்
சிறுநனி தமிய ளாயினும்
10இன்னுயிர் நடுங்குந்த னிளமைபுறங் கொடுத்தே.

     திணையும் துறையு மவை. அவள் தீப்பாய்வாளைக் கண்டு
மதுரைப் பேராலவாயால் சொல்லியது.

     உரை: யானை தந்த முளிமர விறகில் - யானை கொண்டு வரப்பட்ட
உலர்ந்த மரத்து விறகால்; கானவர் பொத்திய ஞெலி தீ விளக்கத்து -
வேடர் மூட்டப்பட்ட கடைந்துகொள்ளப்பட்ட எரியாகிய விளக்கினது
ஒளியின்கண்; மடமான் பெரு நிரை - மடவிய மானாகிய பெரிய நிரை;
வைகு துயில் எடுப்பி - வைகிய உறக்கத்தை எழுப்பி; மந்தி சீ்கும் - மந்தி
தூர்க்கும்; அணங்குடைத் தேவியுடைய முற்றத்து; நீர் வார் கூந்தல்
இரும்புறம்தாழ - நீர் வடிந்த மயிர் மிக்க புறத்தில் வீழ;பேரஞர்க்கண்ணள்
- பெரிய துன்பமேவிய கண்ணையுடையளாய்; பெருங்காடு நோக்கித்
தெருமரும் - புறங்காட்டைப் பார்த்துத் தான் சுழலும்; தன் கொழுநன் -
தன் தலைவன்; முழவுகண் துயிலா - முழவினது கண் மார்ச்சனை யுலராத;
கடியுடைய வியன்நகர் சிறுநனி தமியளாயினும் - காவலையுடைய அகலிய
கோயிலுள் மிகச் சிறிதுபொழுது தனித்திருப்பினும்; இன்னுயிர் நடுங்கும்
தன் இளமை புறங்கொடுத்து - இனிய உயிர் தளரும், தன் இளமை
புறங்கொடுத்து; எ - று.


     ...யான் அதற்கு அஞ்சி நடுங்குதல்...இளமை புறங்கொடுத்துப்
பெருங்காடு நோக்கித் தான் தெருமரும் எனக் கூட்டுக. அம்ம: அசை.

     விளக்கம்: காட்டில் வெட்டி வீழ்த்தப்பட்ட மரங்களைப் பழகிய
யானைகளைக் கொண்டு கொணர்விப்பது இன்றும் நிகழும் நிகழ்ச்சி. தீ
விளக்கத்தின்கண் மானிரை துயிலுவது இயல்பு; பிறரும், “சிறுதலை நவ்விப்
பெருங்கண் மாப்பிணை, அந்தி யந்தண ரருங்கட னிறுக்கும், முத்தீ
விளக்கில் துஞ்சும்” (புறம்.2) என்பது காணக். அணங்கு - அணங்குடைய
தேவி. முழவினை இடையறாது இசைத்தலால் சூடேறிக் கிழயாதபடி
மார்ச்சனையை ஈரப்படுத்துதலால்” முழவுகண் துயிலா என்றதற்கு
“முழவினது கண் மார்ச்சனையுலராத” என்று உரை கூறப்பட்டது. படவே,