5 | தெண்ணீர்ப் பரப்பி னிமிழ்திரைப் பெருங்கடல் | | உண்ணா ராகுப நீர்வேட் டோரே ஆவு மாவுஞ் சென்றுணக் கலங்கிச் சேறொடு பட்ட சிறுமைத் தாயினும் உண்ணீர் மருங்கி னதர்பல வாகும் | 10 | புள்ளும் பொழுதும் பழித்த லல்லதை | | உள்ளிச் சென்றோர்ப் பழியல ரதனாற் புலவேன் வாழிய ரோரி விசும்பிற் கருவி வானம் போல வரையாது சுரக்கும் வள்ளியோய் நின்னே. |
திணையும்துறையு மவை. வல்வில்ஓரியைக்கழைதின் யானையார் பாடியது.
உரை:ஈ என இரத்தல் இழிந்தன்று - இழிந்தோன் கூற்றால் ஈ எனச் சொல்லி யிரத்தல் இழிந்தது; அதன் எதிர் ஈயேன் என்றால்- அவ்வீயென்ற தன் எதிர் ஈயேன் என்று சொல்லிமறுத்தல்; அதனினும் இழிந்தன்று - அவ்விரத்தலினும் இழிந்தது; கொள் எனக் கொடுத்தல் உயர்ந்தன்று - ஒருவன் இரப்பதன் முன்னே அவன் குறிப்பை முகத்தான் உணர்ந்து இதனைக் கொள்வாயாக என்று சொல்லித் தான்இரந்து கொடுத்தல் ஒருவற்கு உயர்ந்தது; அதன் எதிர் கொள்ளேன் என்றல் - அதனை அவன் அவ்வாறு கொடுப்ப அதன் எதிர் கொள்ளேனென்று சொல்லி மறுத்தல்; அதனினும் உயர்ந்தன்று -அக் கொடையினும் உயர்ந்தது; தெள்நீர் பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல்- தெளிந்த நீர்ப்பரப்பான் ஒலிக்கும் திரையையுடைய பெரிய கடல்நீரை; உண்ணாராகு நீர்வேட்டோர் - உண்ணாராவர் தண்ணீரை விரும்பினோர்; ஆவும் மாவும் சென்றுணக் கலங்கி - ஆவும் மாவும் சென்று நீரையுண்ணக் கலங்கி; சேறொடுபட்ட சிறுமைத்தாயினும் - சேற்றொடு கூடிய சிறுமையை யுடைத்தேயாயினும்; உண்ணீர் மருங்கின் அதர் பலவாகும் - உண்ணு நீரையுடைய தாழ்ந்தவிடத்துச் செல்லும் வழி பலவாகும்; புள்ளும் பொழுதும் பழித்தல்அல்லதை - தாம்புறப்பட்டுச்செல்லப்பட்டவழியிடத்துஅப்பொழுது செய்யும் புள் நிமித்தத்தையும் புறப்பட்ட முழுத்தத்தையும் பழித்தலல்லது; உள்ளிச் சென்றோர்ப் பழியலர் - தாம் பரிசில் பெறக் கருதிச் செல்லப்பட்டோரை அவர் ஈத்திலராயினும் பரிசிலர் பழியார்; அதனால் புலவேன்- அதனால் நீஎனக்கு இன்னையாயினும் வெறேன்; வாழியர் ஓரி-வாழ்வாயாக ஓரி; விசும்பில் கருவிவானம்ே பால - ஆகாயத்தின்கண் மின் முதலிய தொகுதியையுடைய மழைபோல; வரையாது சுரக்கும் வள்ளியோய் நின்னே - யாவர்க்கும் |