பக்கம் எண் :

125

     

அவனோடு கூடி இன் புற்றிருந்தவிடத்து அவனையின்றி உயிர்
வாழ்தற்பொருட்டு இரக்கக்கடவோமென்றெழுந்திருந்து வருத்தம்
கொள்வாயாயினும்; இரண்டும் கையுள போலும் - இரண்டும் நினது
கையகத்துள்ளன்; கடிது அண்மைய முன்னூர்ப் பூசலில் தோன்றி -
மிக்கஅணுமையையுடையர் ஊர் முன்னாகச் செய்யப்பட்ட பூசலின்கண்
தோன்றி; தன்னூர் நெடுநிரை தழீ இய மீளியாளர் தன்னுடைய ஊரின்கண்
மிக்க நிரையைக் கொண்ட மறத்தினையுடைய வீரர்; விடுகணை நீத்தம் துடி
புணையாகவென்றி தந்து - எய்யப்பட்ட அம்பு வெள்ளத்தைத் தன்
துடியேபுணையாகக் கடந்து; கொன்று - பகைவரைக் கொன்று; கோள்
விடுத்து- அவர் கொண்ட நிரையை மீட்டு; வையகம்புலம்ப - உலகம்
தனிப்ப; வளைஇய பாம்பின் வையெயிற்று உய்ந்தமதியின் - சூழ்ந்துகொண்ட
பாம்பினது கூரிய பல்லினின்று பிழைத்துப்போந்த திங்களைப் போல; மறவர்
கையகத் துய்ந்தகன்று டைப் பல்லான் நிரையொடு வந்த - மறவருடைய
கையினின்றும் பிழைத்துப்போந்த கன்றையுடைய பலவாகியஆனிரையுடனே
வந்த; உரையனாகி - சொல்லையுடையனாய்; உரிகளை அரவம்மான -
தோலுரித்த பாம்பு போல; தானேஅரிது செல்லுலகில் சென்றனன் - தான்
ஒருவனுமேயாகஅரிதாகச் செல்லப்படும் தேவருகத்தின்கட் போயினான்;
உடம்பு - அவனது உடம்ப; கானச் சிற்றியாற்று அருங்கரை - காட்டுட்
சிற்றியாற்றினது அரிய கரையிடத்து; காலுற்றுக்கம்பமொடு சிற்றியாற்றினது
அரிது கரையிடத்து; காலுற்றுக்கம்பமொடு துலங்கிய இலக்கம் போல -
காலுற நின்று நடுக்கத்தோடு சாய்ந்த இலக்கத்தை யொப்ப; அம்பொடு
துளங்கி ஆண்டு ஒழிந்தன்று - அமபாற்சலித்து அவ்விடத்து வீழ்ந்தது;
உயர்இசை வெறுப்பத் தோன்றியோன் பெயர் - உயர்ந்த கீர்த்தி மிகவும்
தோன்றிய மறவன் பெயர்;  மடஞ்சால்  மஞ்ஞை  யணிமயிர்சூட்டி -
மென்மை  யமைந்த  மயிலினது  அழகிய  மயிராகிய  பீலியைச்சூட்ட;
பிறர் இடம் கொள்ளாச் சிறுவழி - பிறர்இடங்கொள்ளப்படாத சிறிய
விடத்து; படஞ்செய் பந்தர்க்கல்மிசையது - புடைவையாற் செய்யப்பட்ட
பந்தர்க்கீழ் நட்டகல்மேலது; எ - று.


     சூட்டியென்பது சூட்டவெனத் திரிக்கப்ட்டது; சூட்டப்பட்
டெனினுமமையும். மனையோள் கூந்தனோக்கி என்பதற்குப் “பாண,
என்மனைவியது சரியும் மயிரை நோக்கி” யெனவும், புரவுத்
தொடுத்தென்பதற்கு அன்று உம்மைப் புரந்த பரிசபை்பாடியெனவும்
உரைப்பாருமுளர்.

     விளக்கம்: உரையில் ஒரு மனைவி யென்றதில், மனைவி, மனைக்கு
உரியவளாகிய ஒருத்தி யென்பதுபட நின்றது. வழிச்செல்வோர் எதிரே,
விரித்த தலைமயிருடன் ஒருத்தி முற்படவரின், அதனைத்தீநிமித்தமாகக்

கருதுவது இயல்பு.