என் அறிவும் தடுமாற்றம் அடைகிறது; அதனால் என் வறுமையைத் தீர்ப்பாயாக என்று வேண்டினார். உடனே அவனும் அவர் வேண்டும் பரிசிலை நிரம்ப நல்கிச் சிறப்பித்தான்.
| பயங்கெழு மாமழை பெய்யாது மாறிக் கயங்களி முளியுங் கோடை யாயினும் புழற்கா லாம்ப லகலடை நீழற் கதிர்க்கோட்டு நந்தின் சுரிமுக வேற்றை | 5 | நாகிள வளையொடு பகன்மணம் புகூஉம் | | நீர்திகழ் கழனி நாடுகெழு பெருவிறல் வான்றோய் நீள்குடை வயமான் சென்னி சான்றோ ரிருந்த வவையத் துற்றோன் ஆசா கென்னும் பூசல் போல | 10 | வல்லே களைமதி யத்தை யுள்ளிய | | விருந்துகண் டொளிக்குந் திருந்தா வாழ்க்கைப் பொறிப்புண ருடம்பிற் றோன்றியென் அறிவுகெட நின்ற நல்கூர் மையே. |
திணை: பாடாண்டிணை; துறை: பரிசில் கடாநிலை. சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட்சென்னியைப் பெருங்குன்றூர்கிழார் பாடியது.
உரை: பயங்கெழு மாமழை பெய்யாது மாறி - பயன் பொருந்திய பெரிய முகில் பெய்யா தொழிதலால்; கயம் களி முளியும் கோடை யாயினும் - நீர்நிலைகள் களியாய் முளியும் கோடைக்காலமாயினும்; புழற்கால் ஆம்பல் அகலடை நீழல் - துணைபொருந்தி தாளையுடைய ஆம்பலினது அகலிய இலையின் நீழற்கண்; கதிர்க்கோட்டு நந்தின் சுரிமுக ஏற்றை -கதிர்போலும் கோட்டையுடைய நத்தையினது சுரிமுகத்தையுடைய ஏற்றை; நாகிள வளையொடு பகல் மணம் புகூஉம் - நாகாகிய இளைய சங்குடனே பகற்காலத்தே மணங் கூடும்; நீர் திகழ் கழனி நாடு கெழு பெருவிறல் - நீர் விளங்கும் வயலையுடைத்தாகிய நாட்டையுடைய பெரியவெற்றியையுடையோய்; வான் தோய் நீள்குடைவயமான் சென்னி - ஆகாயத்தைப் பொருந்தும் நெடிய குடையினையும் வலிய குதிரையினையுமுடைய சென்னி; சான்றோர் இருந்த அவையத்து உற்றோன் - அறிவான் அமைந்தோர் தொக்கிருந்த அவையின்கண் சென்று பொருந்தினானொருவன்; ஆசா கென்னும் பூசல் போலயானுற்ற துன்பத்திற்குத் துணையாய் எனக்கு நீர் பற்றாக வேண்டும் என்னும் ஆரவாரத்தை அவர் விரையத் தீர்க்குமாறு போல; வல்லே களைமதி - விரையத் தீர்ப்பாயாக; உள்ளிய விருந்து கண்டு ஒளிக்கும் திருந்தா வாழ்க்கை - என்னைக் கருதி |